பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
தெலுங்கு சினிமாவில் காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் ராணா-த்ரிஷா. இதன்காரணமாக தான் நடிக்கிற படங்களிலும், மற்ற ஹீரோக்கள் நடிக்கும் படங்களிலும் த்ரிஷாவுக்கு சிபாரிசு செய்து பல படவாய்ப்புகளை வாங்கிக்கொடுத்து வந்தார் ராணா. அதனால்தான் தெலுங்கில பிசியாக நடித்துக்கொண்டிருந்தார் த்ரிஷா.
இந்நிலையில், ராணா-த்ரிஷாவின் காதல் கல்யாணத்தில் முடியப்போவதாக டோலிவுட்டில் செய்திகள் பரவி, அது காட்டுத்தீயாய் கோலிவுட்டிலும் பற்றிக்கொண்டு எரிந்தது. அதையடுத்து ராணாவின் குடும்பத்தில் த்ரிஷாவின் காதலுக்கு பலத்த எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அதன்பிறகு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதையே நிறுத்திக்கொண்டனர்.
அதனால், அதுவரை த்ரிஷாவுக்கு ஒரு மேனேஜர் போன்று படங்களை வாங்கிக்கொடுத்து வந்த ராணா, பின்னர் அந்த வேலையை விட்டுவிட்டார். அப்படி அவர் கைவிட்டதால்தான் த்ரிஷாவுக்கு தெலுங்கில் புதிய படங்கள் இல்லையாம். தனக்கு பரிட்சயமானவர்கள் மூலம் படவாய்ப்புகளுக்கு முயற்சி எடுக்கலாம் என்றாலும், அப்படி சென்றால், மீண்டும் ராணாவை சந்திக்க வேண்டியதிருக்குமே என்றுதான் ஆந்திரா பார்டருக்குள் செல்லவே தயங்கி நிற்கிறாராம் த்ரிஷா.