தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லிங்குசாமி இயக்கதில், சூர்யா நடிக்கும் படத்திற்கு அஞ்சான் என்று டைட்டில் வைத்துள்ளனர். சமந்தா ஹீரோயினாக நடிக்கிறார். லிங்குசாமியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். முதல் கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் முடிந்துள்ளது.
லிங்குசாமி டைரக்ஷனில் ஆனந்தம், சண்டக்கோழி படத்தில் சூர்யா நடிக்க வேண்டியது அது தவறி இப்போதுதான் இருவரும் இணைந்திருக்கிறார்கள்.
அஞ்சானில் சூர்யாவுக்கு இரண்டு கெட்அப் இருக்கிறது. இதற்காக 300 கெட்-அப்புகள் வரை சூர்யாவுக்கு போட்டுப் பார்த்து அதில் இரண்டு கெட்அப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள்.
மும்பை ஷூட்டிங்கின்போது சமந்தாவுக்கு சரும நோய் பிரச்னையால் ஷூட்டிங் தடைபட்டது. அவர் நடிப்பாரா மாட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. அவர்தான் நடிக்கிறார் என்பதை லிங்குசாமி உறுதியாக கூறியிருக்கிறார்.
அஞ்சான் என்றால் அஞ்சாதவன், எதற்கும் அஞ்சாதவன் என்று பொருள்.
சாப்ட்வேர் என்ஜினீயரான சூர்யா, வேலை நிமித்தமாக மும்பைக்குச் செல்லும்போது அங்கு ஒருவருக்கு நல்லது செய்வதற்காக ஒரு காரியத்தை செய்து விடுகிறார். அவர் செய்த காரியம், மும்பை நிழல் உலக தாதாக்களையே அதிர வைக்கிறது. தான் செய்த காரியத்தின் முக்கியத்தும் தெரியாமலேயே சென்னை திரும்புகிறார். சூர்யாவைத் தேடி அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பல்வேறு வடிவங்களில் சென்னை வருகிறார்கள். அவர்கள் சூர்யாவை கண்டுபிடித்தார்களா, சூர்யா செய்த காரியம் என்ன என்பதுதான் கதை என்று இப்போதைக்கு கசிந்திருக்கிறது.
ஆகஸ்ட் மாதம் படம் ரிலீஸ்.