பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
எஸ்.ஏ.சூர்யா தானே நடித்து இசை அமைத்து, தயாரித்து இயக்கி வரும் படம் இசை. நான்கு வருடங்களாக இந்தப் படத்தை எடுத்து வருகிறார். படம் ஏன் தாமதம் என்பது பற்றி இப்போது விளக்கம் அளித்திருக்கிறார். அது வருமாறு: இசை படத்தின் கதையை முடிவு செய்து விட்டு இதை சினிவாக எடுப்போமா? வேண்டாமா? என்று 6 மாதங்கள் யோசித்துக் கொண்டிருந்தேன். நல்ல குளிரில் பனி படர்ந்த பேக்ரவுண்டில் ஒரு சர்ச்சில் சில காட்சிகள் படமாக்குவதற்காக கொடைக்கானில் சர்ச் செட் போட்டு நான் நினைத்திருந்த குளிர் கிளைமேட்டுக்காக 6 மாதங்கள் காத்திருந்தேன். அதற்கு பிறகு ஒன்றரை வருடம் ஷூட்டிங் நடந்துச்சு.
படத்துக்கு ஹீரோயின் தேடுறதுக்கு 6 மாதம் ஆச்சு. 124 பேரை ஆடிசன் பண்ணி என் கதைக்கு தேவையானவரை கண்டுபிடிச்சேன். அவர்தான் சாவித்ரி. அந்தக் கால சாவித்ரி மாதிரி அழகு. அவரைப்போலவே நடிக்கவும் செய்ததால் மும்பை பொண்ணுக்கு சாவித்ரின்னே பெயர் வைத்தேன். படத்துக்கு நான் இசை அமைப்பதுன்னு முடிவு பண்ணிய பிறகு முறைப்படி இசை கத்துக்குறதுக்கு 8 மாசம் எடுத்துக்கிட்டேன்.
இப்படியே நான்கு வருஷங்கள் ஓடிப்போச்சு. இது இளையராஜா, ஏ.ஆர்.ரகுமானோட கதைன்னு சொல்றதெல்லாம் வதந்தி. எல்லா துறையிலேயும் சாதித்த தலைமுறைக்கும், இளைய தலைமுறைக்கும் ஒரு ஈகோ ஓடிக்கிட்டிருக்கும். அப்படி இசைத் துறையில ஓடுற ஈகோதான் கதை. நிச்சயமா இளையராஜா, ரகுமான் கதை இல்லை. படத்தை பார்த்துட்டு அவுங்க ரெண்டு பேரையும் நினைச்சிகிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லை என்கிறார் எஸ்.ஜே.சூர்யா.