ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், திருக்குறளை கொண்டாடுவது தமிழர்களின் காலக் கடமையாகும். அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றைக் கருதுகிறது. ஒன்று கெளடில்யரின் ''அர்த்த சாஸ்திரம், இரண்டு மாக்கிய வல்லியின் ''தி பிரின்ஸ்'' மற்றும் மூன்றாவதாக திருவள்ளுவரின் ''திருக்குறள்''. மற்ற இருநூல்களையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் திருக்குறள் மானுட மேன்மையில் ஒரு படி உயர்ந்தது நிற்கிறது.
மற்ற இரண்டு நூல்களும் வாழ்வில் வெற்றி முக்கியம், வெற்றிக்கான வழிமுறைகள் முக்கியமல்ல என்கின்றன. ஆனால் வெற்றியை போலவே அதை அடையும் வழியும் முக்கியம் என திருக்குறள் கூறுகிறது. புறவழியில் வருதெல்லாம் இன்பமல்ல, அறவழியில் வருவது மட்டுமே என்று உலக நீதியை உரக்க சொல்கிறது திருக்குறள்.
இந்ததிருநாளில் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். மதச்சார்பற்ற அரசின் கீழ் நாம் இயங்குகிறோம், ஆகையால் மதச்சார்பற்ற ஒரு நூலைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், அதற்கு திருக்குறளை தவிர வேறு எந்த நூலும் இல்லை. எனவே மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.
முன்னதாக நிகழ்ச்சியில், பத்துக்குறள்களை தமிழிசைப் பாடகி கடலூர் ஜனனி மெட்டமைத்துப் பாடினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழர் பேரவையினர் செய்து இருந்தனர்.