Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் : மத்திய அரசுக்கு வைரமுத்து கோரிக்கை

15 ஜன, 2014 - 17:50 IST
எழுத்தின் அளவு:

திருவள்ளுவர் தினத்தையொட்டி சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், திருக்குறளை கொண்டாடுவது தமிழர்களின் காலக் கடமையாகும். அறிவுலகம் தலை சிறந்த சமூக அரசியல் நூல்களாக மூன்றைக் கருதுகிறது. ஒன்று கெளடில்யரின் ''அர்த்த சாஸ்திரம், இரண்டு மாக்கிய வல்லியின் ''தி பிரின்ஸ்'' மற்றும் மூன்றாவதாக திருவள்ளுவரின் ''திருக்குறள்''. மற்ற இருநூல்களையும் நான் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. ஆனால் திருக்குறள் மானுட மேன்மையில் ஒரு படி உயர்ந்தது நிற்கிறது.

மற்ற இரண்டு நூல்களும் வாழ்வில் வெற்றி முக்கியம், வெற்றிக்கான வழிமுறைகள் முக்கியமல்ல என்கின்றன. ஆனால் வெற்றியை போலவே அதை அடையும் வழியும் முக்கியம் என திருக்குறள் கூறுகிறது. புறவழியில் வருதெல்லாம் இன்பமல்ல, அறவழியில் வருவது மட்டுமே என்று உலக நீதியை உரக்க சொல்கிறது திருக்குறள்.

இந்ததிருநாளில் மத்திய அரசுக்கு ஒரு வேண்டுகோள். மதச்சார்பற்ற அரசின் கீழ் நாம் இயங்குகிறோம், ஆகையால் மதச்சார்பற்ற ஒரு நூலைத்தான் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும், அதற்கு திருக்குறளை தவிர வேறு எந்த நூலும் இல்லை. எனவே மத்திய அரசு இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் தேசிய நூலாக திருக்குறளை அறிவிக்க வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக நிகழ்ச்சியில், பத்துக்குறள்களை தமிழிசைப் பாடகி கடலூர் ஜனனி மெட்டமைத்துப் பாடினார். விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழர் பேரவையினர் செய்து இருந்தனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in