'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பேராண்மை படத்திற்கு பிறகு எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வரும் படம் புறம்போக்கு. தற்போது குளுமனாலியில் இதன் ஷூட்டிங் நடந்து வருகிறது. ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நடிக்கிறார்கள். வேறுபட்ட இரு இளைஞர்களின் வாழ்க்கையை கொண்டு சொல்லப்படுகிற கதை. இதில் ஆர்யா பொருளாதார நிபுணராகவும், விஜய்சேதுபதி ரெயில்வே கலாசி தொழிலாளியாகவும், ஷாம் போலீஸ் அதிகாரியாகவும், கார்த்திகா கல்லூரி பேராசிரியையாகவும் நடிக்கிறார்கள். ஆர்யா ஒரு பஞ்சாப் இளைஞராக, அதுவும் தேச விடுதலைக்காக தூக்கு கயிறை முத்தமிட்ட மாவீரன் பகத்சிங்கின் குடும்ப வாரிசாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி தயாரிப்பு வட்டாரத்தில் விசாரித்தபோது, ஆர்யா பகத்சிங்காக நடிக்கிறார் என்பதை மட்டும் சொல்லிவிட்டு மேற்கொண்டு தகவல் தர மறுத்து விட்டார்கள். சென்னை கல்லூரியில் படிக்கும் ஆர்யா கல்லூரி நாடகம் ஒன்றில் பகத்சிங்காக நடிப்பதாக கதை உள்ளதாகவும் கூறப்படுகிறது. அப்போது இன்றுள்ள சிறை சட்டங்கள் பற்றி அவர் விஜய் சேதுபதியுடன் உரையாடுவதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் வெளியிட்ட பட விளம்பரங்கள் இதனை உறுதிப்படுத்துகிறது. பகத்சிங் போன்றே உடை அணிந்து அவரைப்போலவே ஆர்யா அமர்திருக்கும் காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது. அருகில் உள்ள படத்தில் நிஜமான பகத்சிங்கும், நிழல் பகத்சிங் ஆர்யாவும் உள்ளனர்.