ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இளையவன், கண்ணா உன்னை தேடுகிறேன் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்தவர் சத்யன். ஆனால் அவர் நடித்த அந்த இரண்டு படங்களுமே வெற்றி பெறாததால் அதன்பிறகு காமெடியாக மாறினார் சத்யன். இப்போது முன்னணி காமெடியன் இல்லை என்றபோதும் இரண்டாம்தட்டு காமெடியனாக மார்க்கெட்டில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சந்தானம், விடிவி கணேஷ் உள்பட சில காமெடியன்கள் ஹீரோவாக நடித்து வருவதைத் தொடர்ந்து சத்யனுக்கு மீண்டும் ஹீரோவாக நடிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. அதனால் சில டைரக்டர்களிடம் தனக்கு பொருத்தமான கதையை கேட்டு வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் நான் அறிமுகமானதே கதாநாயகனாகத்தான். அதனால் அந்த ஆசை இப்போதுவரை என் மனதுக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது. மேலும், சமீபகாலமாக பொருத்தமான கதைகள் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிக்கலாம் என்கிற நிலை உருவாகியிருப்பதால், எனக்கு பொருத்தமான கதைகள் தேடிக்கொண்டிருக்கிறேன்.
மேலும், கே.பாக்யராஜ் பாணி கதைகள் எனக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் அந்த மாதிரி கதைகளில் காமெடி கலந்து நடிப்பேன் என்று சொல்லும் சத்யனிடம் நீங்கள் எதிர்பார்ப்பது போன்ற கதைகள் கிடைத்தால் அதை நீங்களே தயாரிப்பீர்களா? என்று கேட்டால், படம் தயாரிக்கும் எண்ணம் இல்லை. என்னிடம் கதை சொல்ல வருகிற டைரக்டர், தயாரிப்பாளருடனும் வர வேண்டும். அப்போதுதான் அந்த படத்தில் நடிப்பேன் என்கிறார்.