டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அதன்பிறகு எதிர்நீச்சல் படத்திலும் ஹிட் கொடுத்ததால் முன்னணி இசையமைப்பாளராகி விட்டார். வணக்கம் சென்னை உள்பட பல படங்களுக்கு இசையமைத்த அவர், ஆர்யா நடித்த இரண்டாம் உலகம் படத்துக்கு பின்னணி இசையமைத்தார். அந்த அளவுக்கு பாடல் மட்டுமின்றி அவரது பின்னணி இசைக்கும் இயக்குனர்கள் மத்தியில் வரவேற்பு எழுந்திருக்கிறது.
தற்போது, தனுஷ் நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி, சிவகார்த்திகேயன் நடிக்கும் மான்கராத்தே உள்பட சில மெகா படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருக்கும் புதிய படத்திற்கும் இசையமைக்க உள்ளார். ஆக, குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர் அந்தஸ்தை எட்டிப்பிடித்து விட்டார்.
இந்நிலையில், சித்தார்த் நடித்த காதலில் சொதப்புவது எப்படி படத்தை இயக்கிய பாலாஜி மோகன் தற்போது இயக்கி வரும் வாய் மூடி பேசவும் படத்துக்கு இசையமைத்து தருவதாக 5 லட்சம் அட்வான்ஸ் வாங்கிய அனிருத், இப்போது அப்படத்திற்கு குறித்த நேரத்தில் இசையமைத்து தரவில்லை என்று ஷான் ராகவேந்திரா என்ற புதிய இசையமைப்பாளரை வைத்து இசையமைத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதனால், அனிருத்திடம் கொடுத்த அட்வான்சை திருப்பிக்கேட்டபோது, அவர் தரவில்லையாம். அதனால் அப்படத்தின் தயாரிப்பாளரான வருண் மணியன் இதுகுறித்து அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்த விசாரணை நடக்கிறதாம்.