ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஓரினச்சேர்க்கைக்கு சட்டரீதியாக எதிர்ப்புகள் இருப்பினும், அதற்கு சினிமாத்துறையைச்சேர்ந்த சில பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துதான் வருகிறார்கள். செக்ஸ் உறவு என்பது அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதனால், ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலும் அதற்கு தடை போடக்கூடாது. அவரவர் விருப்பத்துக்கு விட்டு விட வேண்டும் என்று சமீபத்தில் ஒரு நடிகை கருத்து தெரிவித்திருந்தார்.
இப்போது இன்னொரு நடிகையான ப்ரியாமணியும், ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு தெரிவித்து கருத்து சொல்லியிருக்கிறார். அதாவது, ஓரினச்சேர்க்கை கலாசாரத்தை எதிர்க்கக்கூடாது. மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்களோ அந்த வழியில் விட்டு விட வேண்டும். அதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றாலும், எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க வேண்டும் என்று துணிச்சலாக கருத்து வெளியிட்டுள்ளார்.
அதோடு, ஓரினச்சேர்க்கையை மையமாக வைத்து வெளியான பயர் படத்தைப்போன்று தனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் நடிப்பதற்கும் தான் தயாராக இருப்பதாக கூறியுள்ள ப்ரியாமணி, பயர் படத்தில் நடித்த சபானா ஆஷ்மி, நந்திதா தாஸை விடவும் அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தவும் தயாராக இருக்கிறாராம். ஓரினச்சேர்க்கை குறித்து ப்ரியாமணி வெளியிட்டுள்ள இதே கருத்து பெருவாரியான நடிகர்-நடிகைகள் மத்தியிலும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.