ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
உடல் தானம், ரத்த தானம் செய்தவர்கள், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம், என, நடிகை நமீதா அறிவித்துள்ளார். சென்னை, கேளம்பாக்கம் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை நமீதா பங்கேற்றார். அங்கு, மாணவ, மாணவியர் ரத்தானம், உடல் தானம் செய்ததை பார்த்து பெருமைப்பட்டார்.
மாணவர் சந்திப்பில், நமீதா பேசியதாவது:மாணவ, மாணவியர் சமூக அக்கறையோடு, ரத்ததானம், உடல் தானம் வழங்குவது பாராட்டுக்குரியது. வரும் காலம் எனக்கு நம்பிக்கை தருகிறது. படிப்போடு, சம்பாதிப்பதோடு, சமூகம் சார்ந்த சிந்தனையும் மாணவர்களுக்கு இருக்க வேண்டும். மாணவர்களை நான் பாராட்டுகிறேன்.ரத்த தானம் அல்லது உடல் தானம் செய்தவர்கள், என்னை, எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். என்னை சந்திக்க வரும்போது, ரத்த தானம் அல்லது உடல் தானம் செய்ததற்கான சான்றிதழ் கொண்டு வரவேண்டும்.இவ்வாறு, நமீதா பேசினார்.