ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
நடிகர் கார்த்திக்கின் வாரிசு எனும் அடையாத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். முதல்படமே மணிரத்னம் இயக்கிய கடல் படம். இன்று நடிகர்களாக இருக்கும் அநேக நட்சத்திரங்களுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. சிலருக்கு அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது, சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. ஆனால் கெளதமிற்கு முதல்படமே மணியின் படம் என்பதால் ரொம்பவே உற்சாகத்தோடு நடித்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை, இருப்பினும் அதற்கு அடுத்தப்படியாக சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...
* முதல் பட அனுபவம் குறித்து?
படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது, அழுது விட்டேன். ஒன்றரை ஆண்டு கடல் படத்துக்காக கடுமையா உழைச்சிருக்கேன். அடியே... பாட்டுக்காக காலில் நிறைய அடி வாங்கியிருக்கேன். அப்புறம் சித்திரை நிலவு பாட்டுக்கு, கொஞ்சம் அழணும்ன்னு மணி சார் சொல்லும் போது நிஜமா அழுதேன். கடல் படம் என்னை அவ்ளோ பாதிச்சது. இந்த அடி, வலி எல்லாம் மறந்து, ஸ்கிரீன்ல என்னை பார்க்கும் போது, ரொம்ப சந்தோஷப்பட்டேன்.
* புதிய ஹீரோக்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?
அதர்வா நடிப்பு ரொம்ப பிடித்தது. பரதேசி படத்தில் அருமையா நடிச்சிருந்தார். அப்புறம் எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடிகள் விரும்பி பார்ப்பேன்.
* கடந்தாண்டில், நிறைய ஹீரோக்கள் அறிமுகமாகிருக்காங்க? உங்களுக்கு பயமா இருக்கா?
நிறைய புதுமுகங்கள் வந்தாங்க. அது உண்மை தான். ஆனால், மற்ற எதைப் பற்றியும் நினைக்காமல், என்னால் என்ன செய்ய முடியும்ன்னு தான், நான் யோசிக்கிறேன். என் உயரம் எது வரை என்பதை நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.
* அக்னி நட்சத்திரம் பார்ட்-2வில் நீங்களும், விக்ரம் பிரபுவும் நடிக்க போறதா செய்தி இருக்கே?
அது உண்மை இல்ல. பிரபு அங்கிள், அப்பாவுக்கு அந்த படம், ஒரு பொக்கிஷம் மாதிரி. விருதுகளையும், பேரையும் கொடுத்த படம். அந்த மாதிரி படங்களை தொடவே கூடாது. டைட்டானிக் படம் ரீ-மேக் பண்ணக்கூடாது. அது அவ்ளோ அழகான படம். அந்த மாதிரி தான் அக்னி நட்சத்திரம் படமும்.
* காதல் அனுபவம் குறித்து?
என்னை நிறைய பேர் காதலிக்கிறாங்க. நானும், நிறைய காதல் செய்திருக்கேன். படங்களில், வசனங்கள் மூலமாக, காதலை சொல்லிடலாம். நிஜ வாழ்க்கையில் நேரில் சொல்ல தான் பயமா இருக்கு. அதனால், இப்போது அந்த டென்ஷனை, ஓரமா வச்சுட்டு, படத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். நேரம் வரும்போது, பார்த்துக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.