Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காதலை நேரில் சொல்ல பயமா இருக்கு - கவுதம் கார்த்திக்!!

14 ஜன, 2014 - 04:31 IST
எழுத்தின் அளவு:

நடிகர் கார்த்திக்கின் வாரிசு எனும் அடையாத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். முதல்படமே மணிரத்னம் இயக்கிய கடல் படம். இன்று நடிகர்களாக இருக்கும் அநேக நட்சத்திரங்களுக்கு மணிரத்னம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கியவர்கள் பலர் உண்டு. சிலருக்கு அந்த ஆசை நிறைவேறி இருக்கிறது, சிலருக்கு இன்னும் கனவாகவே இருக்கிறது. ஆனால் கெளதமிற்கு முதல்படமே மணியின் படம் என்பதால் ரொம்பவே உற்சாகத்தோடு நடித்தார். ஆனால் படமோ எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை, இருப்பினும் அதற்கு அடுத்தப்படியாக சிப்பாய், என்னமோ ஏதோ, வை ராஜா வை உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். அவரின் சிறப்பு பேட்டி இதோ...

* முதல் பட அனுபவம் குறித்து?

படம் பார்த்து விட்டு வெளியில் வரும்போது, அழுது விட்டேன். ஒன்றரை ஆண்டு கடல் படத்துக்காக கடுமையா உழைச்சிருக்கேன். அடியே... பாட்டுக்காக காலில் நிறைய அடி வாங்கியிருக்கேன். அப்புறம் சித்திரை நிலவு பாட்டுக்கு, கொஞ்சம் அழணும்ன்னு மணி சார் சொல்லும் போது நிஜமா அழுதேன். கடல் படம் என்னை அவ்ளோ பாதிச்சது. இந்த அடி, வலி எல்லாம் மறந்து, ஸ்கிரீன்ல என்னை பார்க்கும் போது, ரொம்ப சந்தோஷப்பட்டேன்.

* புதிய ஹீரோக்களில் உங்களுக்கு பிடித்தவர் யார்?

அதர்வா நடிப்பு ரொம்ப பிடித்தது. பரதேசி படத்தில் அருமையா நடிச்சிருந்தார். அப்புறம் எனக்கு காமெடி ரொம்ப பிடிக்கும். வடிவேலு, கவுண்டமணி, செந்தில் காமெடிகள் விரும்பி பார்ப்பேன்.

* கடந்தாண்டில், நிறைய ஹீரோக்கள் அறிமுகமாகிருக்காங்க? உங்களுக்கு பயமா இருக்கா?

நிறைய புதுமுகங்கள் வந்தாங்க. அது உண்மை தான். ஆனால், மற்ற எதைப் பற்றியும் நினைக்காமல், என்னால் என்ன செய்ய முடியும்ன்னு தான், நான் யோசிக்கிறேன். என் உயரம் எது வரை என்பதை நான் தெரிந்து வைத்திருக்கிறேன்.

* அக்னி நட்சத்திரம் பார்ட்-2வில் நீங்களும், விக்ரம் பிரபுவும் நடிக்க போறதா செய்தி இருக்கே?

அது உண்மை இல்ல. பிரபு அங்கிள், அப்பாவுக்கு அந்த படம், ஒரு பொக்கிஷம் மாதிரி. விருதுகளையும், பேரையும் கொடுத்த படம். அந்த மாதிரி படங்களை தொடவே கூடாது. டைட்டானிக் படம் ரீ-மேக் பண்ணக்கூடாது. அது அவ்ளோ அழகான படம். அந்த மாதிரி தான் அக்னி நட்சத்திரம் படமும்.

* காதல் அனுபவம் குறித்து?

என்னை நிறைய பேர் காதலிக்கிறாங்க. நானும், நிறைய காதல் செய்திருக்கேன். படங்களில், வசனங்கள் மூலமாக, காதலை சொல்லிடலாம். நிஜ வாழ்க்கையில் நேரில் சொல்ல தான் பயமா இருக்கு. அதனால், இப்போது அந்த டென்ஷனை, ஓரமா வச்சுட்டு, படத்தில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். நேரம் வரும்போது, பார்த்துக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in