பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
கன்னடத்தில் டைரக்டர் வாசு இயக்கிய ஆப்த மித்ரா படம்தான் தமிழில் சந்திரமுகியாக வெளிவந்து சக்கை போடு போட்டது. கன்னடத்தில் நடிகை சவுந்தர்யா நடித்த சந்திரமுகி கேரக்டரில் நடிகை ஜோதிகா நடித்து பல விருதுகளை பெற்றார். இதனைத்தொடர்ந்து சந்திரமுகி பார்ட் 2 எடுக்கும் திட்டம் இருப்பதாக டைரக்டர் வாசு தெரிவித்தார். ஆனால் ரஜினிகாந்த் அடுத்தடுத்த படங்களில் பிஸியாகி விட்டதால் அந்த முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சந்திமுகி பார்ட் 2 படத்தை கன்னடத்தில் எடுத்த வாசு முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் சந்திரமுகி கேரக்டரில் நடிக்க நடிகை சினேகாவை கேட்டிருக்கிறார்கள். சற்றும் யோசிக்காமல் சட்டென்று ஓ.கே., சொன்ன சினேகா, இப்போது சந்திரமுகி படத்தில் ஜோதிகா சந்திரமுகியாக நடித்த காட்சிகளை பார்த்து அதேப்போல லக லக லக... சொல்லி வீட்டில் உள்ளவர்களை பயமுறுத்தி வருகிறாராம்.