டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் கதை வறட்சி ஏற்பட்டிருப்பதாக சினிமா மேடைகளில் பேசி வருகிறார்கள். ஆனால், கதை வறட்சியை விட டைட்டில் வறட்சி அதைவிட கடுமையாக உள்ளதாகவே தெரிகிறது. அதனால்தான் பாண்டிராஜ் இயக்கத்திலும், கெளதம் மேனன் இயக்கத்திலும் சிம்பு நடிக்கும் படங்கள், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் என பல படங்கள் இன்னமும் டைட்டில் வைக்கப்படாமலேயே வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மேலும், பில்லா-2, சிங்கம்-2வை தொடர்ந்து சில படங்கள் விஸ்வரூபம்-2, ஜெய்ஹிந்த்-2 என ஏற்கனவே வெளியான டைட்டீல்களின் இரண்டாம் பாகங்களாக அதே டைட்டிலில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் இன்னும் சில படங்களின் இரண்டாம் பாகங்களும் வளரும் நிலையில் உள்ளன.
இந்நிலையில், மங்காத்தா, பிரியாணி படங்களை இயக்கிய வெங்கட்பிரபு அடுத்து சூர்யாவைக்கொண்டு தான் இயக்கவிருக்கும் படத்துக்கு கமல் நடித்த கல்யாணராமன் என்ற டைட்டில் வைக்கும் முடிவில் இருக்கிறார். கல்யாணராமன் படத்தில் கமல் இரண்டு வேடங்களில் நடித்ததுபோல் இப்படத்தில் சூர்யாவும் இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். அதோடு கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் இதே தலைப்பை வைக்கலாம் என்று சூர்யாவும் சொல்லியிருக்கிறாராம்.
அதனால், கமல் நடித்த கல்யாணராமன் படத்தை தயாரித்த பஞ்சு அருணாசலத்திடம் டைட்டிலை மீண்டும் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதி கோரியுள்ளாராம் வெங்கட்பிரபு.