'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகை அம்பிகா மலையாளத்தில் தற்போது படம் டைரக்ட் செய்து வருகிறார். அவர் திடீரென்று அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்திருக்கிறார். அது சேலை டிசைனர் அவதாரம். கடந்த சில நாட்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அம்பிகா ட்ரீம் கலெக்ஷன் என்ற பெயரில் நடந்த பேஷன் ஷோவில் அம்பிகா டிசைன் செய்த புடவைகளை அணிந்து அழகிகள் அணிவகுத்தனர்.
தனது புதிய அவதாரம் பற்றி அம்பிகா கூறியதாவது: இது சின்ன வயதிலிருந்தே உடன் வருகிறது. நடிக்கும்போதும் எனக்கான உடைகளை நானேதான் தேர்வு செய்து கொள்வேன். வீட்டில் உள்ளவர்களுக்கு புடவை டிசைன் செய்து கொடுப்பதை ஒரு ஹாபியாக வைத்திருந்தேன். அதையே இப்போது பிசினசாக மாற்றி இருக்கிறேன். எனது புடவை டிசைன்களுக்கு மார்க்கெட்டில் நல்ல வேல்யூ இருக்கிறது. புடவைகளில் கிளாமர் என்பதுதான் எனது டார்க்கெட். புடவைகளோடு அதற்கேற்ப ஜாக்கெட் டிசைன் செய்வது எனது பாணி. இரு ஒரு பக்கம் இருந்தாலும், நடிப்பை ஒரு போதும் கைவிட மாட்டேன். எனது இப்போதைய தோற்றத்துக்கு ஏற்ற கேரக்டர்களில் நடித்து வருகிறேன் என்றார்.