விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி |
மலேசிய தமிழர்கள் சிலர் இணைந்து கவுதம் கனி கிரேஸ் (3 ஜீனியஸ்) என்ற பெயரில் படம் தயாரிக்கிறார்கள். சசி அப்பாஸ், சங்கீதா, கவிதா என்ற மூன்று குழந்தைகள்தான் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். அணுசக்தியால் ஏற்படும் நன்மை தீமைகள், நானோ தொழில்நுட்பத்தின் பலன்கள் ஆகியவற்றை வலிவுறுத்தி இந்தப் படம் தயாரிக்கப்படுகிறது. கே.பாக்யராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். பி.கே.ராஜ் என்பவர் டைரக்ட் செய்கிறார். இந்தப் படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு மலேசிய இளைஞர் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் டத்தோ.மு சரவணன் பேசியதாவது: சினிமா என்பது கவனமாக கையாள வேண்டிய துறை. கருத்தும் சொல்ல வேண்டும் அதே நேரத்தில் எண்டர்டெயின்மெண்டும் இருக்க வேண்டும். அதனை சரியாக செய்தவர் எம்.ஜி.ஆர். "இந்தப் படம் ஒடினால் நான் மன்னன், ஓடாவிட்டால் நாடோடி" என்று நாடோடி மன்னன் படத்தை துணிச்சலாக தயாரித்தார். அந்தபடம் ஓடி அவர் தமிழ்நாட்டுக்கே மன்னர் ஆனார். அந்த துணிச்சல் தயாரிப்பாளர்களுக்கு வேண்டும். எம்.ஜி.ஆரின் பாணியை பயன்படுத்தி படம் எடுத்தால் நிச்சயம் வெற்றிதான்.
இவ்வாறு அவர் பேசினார்.