பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான படம் பட்டம்போலே. பிரபல மலையாளப்பட இயக்குனர் ராஜசேனன் இயக்கியுள்ள இந்த படத்தில் தமிழ்நாட்டிலுள்ள கும்ப கோணத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பவராக நடித்திருந்தார் துல்கர்சல்மான். அதனால் தமிழிலேயே அவர் பாடுவது போன்ற ஒரு பாடல் இடம்பெற்றிருந்தது.
அந்த நாளில் அந்தி நேரம் உன்னை பார்த்தேன் கண்ணம்மா -என்று பாரதியார் பாடலின் பாணியில் கவிஞர் அண்ணாமலை எழுதிய அந்த பாடல் கேரளாவில் மெகா ஹிட்டாம். அதனால் இப்போது அதே இயக்குர் ராஜசேனன் தமிழ், மலையாளத்தில் இயக்கி வரும் காயம் என்ற படத்திலும் அண்ணாமலைக்கு பாடல் எழுத வாய்ப்பு கொடுத்துள்ளாராம் ராஜசேனன்.
அதனால் அப்படத்துக்காக மலையாள மியூசிக் டைரக்டர் ஜெயச்சந்திரனின் இசையில் அடுத்து அனைத்து பாடல்களையும் எழுதுகிறாராம் அண்ணாமலை. இதுகுறித்து அவர் கூறுகையில், மலையாள படத்தில் பாரதியாரின் பாடல் வடிவில் பாட்டெழுதியதை ரொம்ப பெருமையாக கருதுகிறேன். அதற்கு அங்குள்ள ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எனக்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. அதனால், தற்போது பாடல் எழுதி வரும் காயம் படத்தில் இன்னும் வித்தியாசமான பாடல்களை எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்குள் ஏற்பட்டுள்ளது என்று சொல்லும் அண்ணாமலை, திருக்குறள் சிறியதாக இருந்தாலும் பெரிய கருத்தை சொல்வது போன்று அடுத்தடுத்து தான் எழுதும் பாடல்களில் சிறந்த கருத்துக்களை வெளிப்படுத்தப்போவதாகவும் சொல்கிறார்.