துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
தங்களது அபிமான ஹீரோக்களின் படங்கள் திரைக்கு வரும்போது அவர்களது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள் தியேட்டர்களில் கட்அவுட், பேனர் என்று வைப்பது வழக்கம். ஆனால், மலையாள நடிகரான கலாபவன் மணி, தனது அபிமான நடிகரான மோகன்லால் நடித்த ஜில்லா கேரளாவில் வெளியாகியிருப்பதை அடுத்து, தனது சொந்த ஊரான எர்ணாகுளம் அருகில் உள்ள சாலகுடி சுரபி தியேட்டரில் மோகன்லால்-விஜய் இடம்பெற்ற பேனரை வைத்து படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்துள்ளாராம்.
இதற்காக அந்த தியேட்டருக்கு கலாபவன் மணி வந்தபோது, அங்கு ஏற்கனவே கூடியிருந்த ரசிகர்கள் பெரும் ஆரவாரம் செய்தார்களாம். அதையடுத்து, இவர் பேனர் வைக்க வந்திருக்கிறார் என்பது தெரிந்ததும் மோகன்லாலின் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தார்களாம். இந்த செய்தி கேரளாவில் பெரும் பரபரப்பு செய்தியாகியிருக்கிறதாம்.
ஜில்லா படத்தைப்பொறுத்தவரை எந்த சம்பந்தமும் இல்லாத கலாபவன்மணி, மோகன்லாலின் ரசிகர் என்ற முறையில் இப்படி பேனர் வைத்திருப்பதைக் கேள்விப்பட்டதும் மோகன்லாலே அவருக்கு போன் செய்து நன்றி தெரிவித்தாராம். அதோடு, மோகன்லாலின் ரசிகர்கள் இப்போது கலாபவன்மணியையும் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களாம்.