Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகை அஞ்சலி தேவி காலமானார்

13 ஜன, 2014 - 15:08 IST
எழுத்தின் அளவு:

பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று(ஜனவரி 13ம் தேதி) காலமானார். 86 வயதாகும் இவர் மூச்சு திணறல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.

1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆந்திராவில் அஞ்சனா குமாரியாக பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. சின்ன வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தவர் .1936ம் ஆண்டு ராஜா ஹரிஸ்சந்திரா என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் டைரக்டர் சி.புல்லையா அஞ்சலியின் நடிப்பு திறமையை பார்த்து கொலாபாமா என்ற படத்தில் மோகினியாக நடிக்க வைத்தார். மேலும் அவரது பெயரை அஞ்சலி தேவி என்று மாற்றினார். தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தவர் லவா குசா படம் மூலம் மேலும் பிரபலமானார். இப்படம் தமிழிலும் வெளியானது. தெலுங்கில் மட்டும் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், மணாளனே மங்கையின் பாக்யம், கணவனே கண்கண்ட தெய்வம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி ஆகியோரது படங்களில் நடித்துள்ளார். இதேப்போல் தெலுங்கு ஜாம்பவான் நடிகர்கள் என்.டி.ஆர்., அக்னி நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அஞ்சலி பிக்சர்ஸ் எனும் பெயரில் சொந்தமாக அனார்கலி, பக்த துக்காராம், சந்திப்ரியா, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.

அஞ்சலி தேவி 1940-ம் ஆண்டு ஆதிநாராயண ராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அஞ்சலி பிக்சர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து, சில படங்களை தயாரித்து வருகின்றனர்.

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த அஞ்சலி தேவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜனவரி 13ம் தேதி) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார். பொங்கல் பண்டிகை என்பதால் அஞ்சலி தேவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்து ஜனவரி 16ம் தேதி, வியாழக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.

எப்படிப்பட்ட கேரக்டரையும் அசால்ட்டாக நடித்து அனைவரையும் கவர்ந்த அஞ்சலி தேவியின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கும் பேர் இழப்பு தான்.

அன்னாரது மறைவுக்கு தினமலரும் தனது அஞ்சலியை இங்கு செலுத்துகிறது!

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in