பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி இன்று(ஜனவரி 13ம் தேதி) காலமானார். 86 வயதாகும் இவர் மூச்சு திணறல் காரணமாக கடந்த ஒரு வாரமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று அவர் மாரடைப்பால் காலமானார்.
1927-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி ஆந்திராவில் அஞ்சனா குமாரியாக பிறந்தவர் நடிகை அஞ்சலி தேவி. சின்ன வயதில் இருந்தே நாடகங்களில் நடித்து வந்தவர் .1936ம் ஆண்டு ராஜா ஹரிஸ்சந்திரா என்ற மலையாள படத்தில் நடித்தார். பின்னர் டைரக்டர் சி.புல்லையா அஞ்சலியின் நடிப்பு திறமையை பார்த்து கொலாபாமா என்ற படத்தில் மோகினியாக நடிக்க வைத்தார். மேலும் அவரது பெயரை அஞ்சலி தேவி என்று மாற்றினார். தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தவர் லவா குசா படம் மூலம் மேலும் பிரபலமானார். இப்படம் தமிழிலும் வெளியானது. தெலுங்கில் மட்டும் சுமார் 350 படங்களில் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், மணாளனே மங்கையின் பாக்யம், கணவனே கண்கண்ட தெய்வம், லவகுசா, அடுத்த வீட்டுப் பெண், நிரபராதி, சர்வாதிகாரி, அன்னை ஓர் ஆலயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், ரஜினி ஆகியோரது படங்களில் நடித்துள்ளார். இதேப்போல் தெலுங்கு ஜாம்பவான் நடிகர்கள் என்.டி.ஆர்., அக்னி நாகேஸ்வரராவ் ஆகியோருடனும் நடித்துள்ளார். நடிகையாக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அஞ்சலி பிக்சர்ஸ் எனும் பெயரில் சொந்தமாக அனார்கலி, பக்த துக்காராம், சந்திப்ரியா, உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
அஞ்சலி தேவி 1940-ம் ஆண்டு ஆதிநாராயண ராவ் என்ற இசையமைப்பாளரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள் இருவரும் அஞ்சலி பிக்சர்ஸ் நிறுவனத்தை நிர்வகித்து, சில படங்களை தயாரித்து வருகின்றனர்.
சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வந்த அஞ்சலி தேவிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று(ஜனவரி 13ம் தேதி) மதியம் 2 மணியளவில் மாரடைப்பால் காலமானார். பொங்கல் பண்டிகை என்பதால் அஞ்சலி தேவியின் உடல் மருத்துவமனையிலேயே வைக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை எல்லாம் முடிந்து ஜனவரி 16ம் தேதி, வியாழக்கிழமை அவரது உடல் அடக்கம் செய்யப்பட இருக்கிறது.
எப்படிப்பட்ட கேரக்டரையும் அசால்ட்டாக நடித்து அனைவரையும் கவர்ந்த அஞ்சலி தேவியின் மறைவு, தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவுக்கும் பேர் இழப்பு தான்.
அன்னாரது மறைவுக்கு தினமலரும் தனது அஞ்சலியை இங்கு செலுத்துகிறது!