ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கன்னட நடிகை ராகிணி திரிவேதி. இந்தியில் பிரபுதேவா இயக்கிய ரா.ராஜ்குமார் படத்தில் ஒரு பாட்டுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். ஆனால் இனி ஒரு பாட்டுக்கு ஆடமாட்டேன் என்று கூறுகிறார். மேலும் அவர் இதுபற்றி கூறியிருப்பதாவது:
நான் முறைப்படி டான்ஸ் கத்துக்கிட்டிருக்கேன். என்னோட படங்கள்ல நான் ஆடின டான்ஸ் பார்த்துட்டு பிரபுதேவா சார் கூப்பிட்டார். இந்தியாவிலேயே பெரிய மாஸ்டர் அவர் கூப்பிடுறப்போ மறுக்க முடியுமா. அதுதான் மறுபேச்சு இல்லாம போயி ஆடிட்டு வந்தேன். ஆடிட்டு வந்தேன்னு சொல்றத விட அவர்கிட்ட கத்துக்கிட்டு வந்தேன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். இந்த ஒரு படம் பிரபுதேவா மாஸ்டருக்காக பண்ணினது. இனிமேல் ஒரு பாட்டுக்கு ஆடமாட்டேன்.
நிமிர்ந்து நில் படத்துக்கு சமுத்திரகனி சார் கூப்பிட்டப்போ கதையே கேட்காம ஒத்துக்கிட்டேன். காரணம் அவரைப் பற்றி எனக்குத் தெரியும். தமிழ்ல ஜெயம்ரவியோடவும், தெலுங்குல நானியோடவும் நடிச்சது புது எக்ஸ்பீரியன்ஸ். இந்தப் படத்துக்கு பிறகு தமிழ்ல எனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்னு நம்புறேன். என்றார் ராகிணி திரிவேதி.