தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! | 'வார்-2' படப்பிடிப்பில் ஜிம் பயிற்சியாளரை மகிழ்வித்த ஜூனியர் என்டிஆர் | மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி |
'கேடி' படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் நடிகை தமன்னா. அதன்பின் கல்லூரி படம்மூலம் பேசப்பட்டார். தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்தவர், பிறகு தெலுங்கு சினிமா பக்கம் போனார். ஒரு சின்ன இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு 'வீரம்' படம் மூலம் வந்துள்ளார்.
முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ள தமன்னா, வீரம் பற்றியும், இனி தன் எதிர்கால சினமா பற்றியும் தினமலருக்கு பேட்டியளித்தார். அவர் கூறுகையில், வீரம் படத்தில் முதன்முறையாக அஜீத்துடன் ஜோடி சேர்ந்துள்ளேன். இந்தப்படத்தில் சிற்பங்களை புதுப்பிக்கும் கல்லூரி மாணவியாக நடித்துள்ளேன். அஜீத்துடன் நடித்தது ஒரு புதுவித அனுபவம். தான் ஒரு பெரிய நடிகர் என்ற எந்த பந்தாவும் இல்லாதவர் அஜீத். தன்னை மட்டுமே படங்களில் மிகைப்படுத்தாமல், தன்னுடன் நடிக்கும் அத்தனை நடிகர், நடிகைகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர். சின்னவர், பெரியவர் என்று பாராமல் எல்லோரையும் ஊக்குவிப்பவர். மொத்தத்தில் ரொம்ப எளிமையான மனிதர் என்று கூறினார். மேலும் இனி வருங்காலங்களில் நிறைய தமிழ் படங்களில் நடிப்பேன் என்றும், ரசிகர்கள், முன்பு போல் என்னை மீண்டும் கொண்டாடுவார்கள் என்று கூறினார்.