தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் எஸ்.வி.சேகரின் மகன் அஸ்வின். வேகம் படம் மூலம் பேசப்பட்ட நடிகர் ஆனார். ஆனால் சிலகாலம் சரியான படங்கள் அவர் எதிர்பார்த்தபடி அமையவில்லை. அதற்குபிறகு நினைவில் நின்றவள் என்ற படத்தில் நடித்தார். இவருடன் கீர்த்தி சாவ்லா, காயத்ரி நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கிய இயக்குனர் அகஸ்திய பாரதி 6 மாதம் முன்பு கேன்சர் நோயால் இறந்து விட்டார். சரி இனி படம் பற்றி அஸ்வின் பேசுகிறார், சபரி மூவிஸ் சார்பில் நினைவில் நின்றவள் என்ற படம் தொடங்கப்பட்டது. படம் கருணை கொலையை மையபடுத்தி படமாக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து ஏற்காடு செல்லும் பஸ் தான் கதை களம். ஒரு திரில்லர் காதல் கதை. படம் பார்த்து வெளியே வரும்போது, ஒரு இறுக்கம் நம்மை தொற்றி கொள்ளும். 7ஜி ரெயின்போ காலனி, மைனா படங்களில், ஒரு சோகம் இருப்பது போல் இந்த படத்திலும் அது இருக்கும். படத்தின் இயக்குனர் முழு படத்தையும் முடித்துவிட்டார். விரைவில் படம் திரைக்கு வர உள்ளது. இதை அடுத்து நட்டிகுமார் இயக்க உள்ள புது படத்திலும், மணல் கயிறு பார்ட்-2 விலும் நடிக்க இருக்கேன். இந்த முறை என் புது முயற்சிகள் நிறைய இருக்கும் என்கிறார் அஸ்வின்.