ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து தனது நடிப்பாற்றலை நிரூபித்தவர் பூஜா. அதற்கு முன்பே பல படங்களில் நடித்திருந்தபோதும் அந்த படம்தான் பூஜாவுக்குள் இருக்கிற திறமையான நடிகையை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், அதையடுத்து நான் கடவுளுக்கு இணையான வேடங்களாக பூஜா எதிர்பார்த்ததால் படவாய்ப்புகள் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டார்.
அதனால், மீண்டும் தனது தாய்மொழியான சிங்கள படங்களில் நடித்து வந்த பூஜாவை, விடியும் முன் என்ற படத்தில் விலைமாது வேடத்தில் நடிக்க அழைத்தபோது கதையில் தனக்கிருந்த முக்கியத்துவத்தை உணர்ந்து மறுபடியும் கோலிவுட்டுக்கு வந்தார். அப்படி அந்த படத்தில் நடித்த நேரம் பார்த்து, மீண்டும் டைரக்டர் பாலா பரதேசியில் நடிக்க பூஜாவை அழைத்தார். அதோடு, அருள்நிதி நடித்த தகராறு படத்திலும் நடிக்க அழைத்தனர்.
ஆனால், விடியும்முன் படத்திற்கு கொடுத்த தேதியிலேயே, இரண்டு படங்களுக்கும் கால்சீட் கேட்டதால், அந்த ஒரு படத்துக்காக இரண்டு படங்களை இழந்தார் பூஜா. ஆனால், அப்படி பூஜா நடித்த விடியும் முன் படம் தோல்வியடைந்து அவரை ஏமாற்றிவிட்டது., அதனால் மீண்டும் நல்ல படங்களுக்காக கல்லெறிந்து வருகிறார் நடிகை.
குறிப்பாக, இரண்டாவது முறையாக தனக்கு அழைப்பு விடுத்த பரதேசி பாலாவிற்கு அடிக்கடி போன் போட்டு, அடுத்து இயக்கும் படத்தில் தனக்கு சான்ஸ் தருமாறு அன்புத்தொல்லை கொடுத்து வருகிறாராம் பூஜா. அதேபோல், ஆர்யா உள்ளிட்ட சில அபிமான ஹீரோக்களுக்கும் போன் செய்து தன்னை ஆதரிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.