'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் |
வல்லவன் படத்தில் சிம்பு-நயன்தாராவின் கெமிஸ்ட்ரி எக்கச்சக்கமாக ஒர்க்அவுட்டாகியிருந்தது. அவர்களின் அளவுக்கதிகமான நெருக்கத்தை பார்த்து, நமக்கு இந்த மாதிரி எந்த கதாநாயகிகளும் ஒர்க்அவுட்டாகவில்லையே என்று மனதளவில் வேதனைப்பட்டனர் பல இளவட்ட ஹீரோக்கள்.
ஆனால் இப்படி பலரது கண்பட்டதாலோ என்னவோ, அந்த படத்தில் நடித்தபோது உருவான சிம்பு-நயன்தாராவின் காதல் குறுகிய காலத்திலேயே டமார் என்று உடைந்து சுக்கு நூறாக நொறுங்கிப்போனது. இதனால் அதன்பிறகு ஒருவரையொருவர் பார்ப்பதைகூட அவர்கள் தவிர்த்தனர். எதேச்சையாக பட விழாக்களில் சந்திக்க நேர்ந்தால் எதிரும் புதிருமாக முகத்தை திருப்பிக்கொண்டு சென்றனர்.
அப்படி 7 வருடங்களை கழித்து விட்ட சிம்பு-நயன்தாராவை மீண்டும் இணைப்பது சம்பந்தமாக யாருமே யோசிக்காத நிலையில், மெரினா பாண்டிராஜ் மட்டும், அந்த ஜோடியை மீண்டும் இணைத்தாலென்ன என்று பாசிட்டீவாக யோசித்தார். அதையடுத்து அவர் எடுத்த முயற்சிக்கு உடனடியாக பலனும் கிடைக்க, இன்று சிம்பு-நயன்தாரா இருவரும் இணைந்து நடிக்கும் காம்பினேஷன் காட்சியை படமாக்குகிறார் பாண்டிராஜ்.
இனிமேல் இணைந்து நடிக்கவே மாட்டார்கள் என்று கருதப்பட்டு வந்த காதல் ஜோடி மீண்டும் நீண்ட நாளைக்குப்பிறகு இணையப்போவதால், அந்தக்காட்சியை காண அப்பட யூனிட் மட்டுமின்றி கோலிவுட்டில் உள்ள பலரும் ஆவலோடு இருக்கிறார்களாம்.
இந்நிலையில், டைரக்டர் பாண்டிராஜோ, அவர்களது நடிப்பில் பழைய கெமிஸ்ட்ரியை கொண்டு வந்து விட வேண்டும் என்ற உறுதியோடு களத்தில் இறங்குகிறாராம். அதனால் அவரும் புல் ரொமான்டிக் மூடோடு இன்று களத்தில் சிம்பு-நயன்தாராவை சந்திக்கப்போகிறாராம்.