600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
ராட்டினம் படத்தில் அறிமுகமானவர் ஸ்வாதி. மலையாள நடிகையான இவர், கேரளத்திலிருந்து தமிழுக்கு வந்து கொடி நாட்டிய அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின், அமலாபால், லட்சுமிமேனன், நஸ்ரியா போன்று தானும் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வேண்டும் என்றுதான் கோடம்பாக்கத்தில் முகாமிட்டிருந்தார்.
ஆனால், முதல் படத்தில் ஓரளவு நல்ல பெயர் கிடைத்தபோதும், அதையடுத்து அப்புக்குட்டியுடன் மன்னாரு படத்தில் நடித்தவர், அதையடுத்து, ஒருவர் மீது இருவர் சாய்ந்து என்ற படத்தில் கடைசியாக நடித்தார். அதையடுத்து அவருக்கு புதிய படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதனால், தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கப்போவதாக சொல்லிக்கொண்டு அங்கு தீவிர முயற்சியில இறங்கிய ஸ்வாதிக்கு, சில படங்கள் கிடைக்கவே தொடர்ந்து மலையாள நடிகையாகி விட்டார். இந்நிலையில், மலையாளத்தில் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது அப்பட நாயகன் அஜய்க்கும், ஸ்வாதிக்குமிடையே காதல் தீ பற்றிக்கொண்டதாம். அதோடு, ஒரு நல்ல நாளைப்பார்த்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டுள்ளார் ஸ்வாதி.
மேலும், ஸ்வாதியின் காதல் கணவர் அஜய், தொடர்ந்து மனைவி நடிப்பதற்கும் பச்சைக்கொடி காட்டியிருக்கிறாராம். அதனால், திருமணமான நடிகைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும் மலையாள சினிமாவில் தனது கலைப்பயணத்தை தொடரப்போகிறாராம் ஸ்வாதி.