பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சினிமா உலகைப்பொறுத்தவரை, சில நடிகர்கள், நான்கு பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் கொடுத்தாலே அதற்கு ப்ரஸ்மீட் வைத்து பெரிய அளவில் பப்ளிசிட்டி செய்து விடுவார்கள். இன்னும் சிலர் சில பெண்களை மேடையில் ஏற்றி அவர்களுக்கு தையல் மிஷின் போன்ற உதவிகளை செய்து விட்டு அதைப்பற்றி பெரிய அளவில் டமாரமடித்து வருகிறார்கள்.
ஆனால், இப்படிப்பட்ட சினிமா உலகில் திரைக்குப்பின்னால் பல அரிய உதவிகளை செய்து வருகிறாராம் களவாணி விமல். ஆனால், அதை யாரிடமும் அவர் சொல்வதில்லையாம். குறிப்பாக தன்னை வைத்து படம் தயாரிப்பவர்கள் நஷ்டப்படுவது போல் இருந்தால் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியைகூட விட்டுக்கொடுத்து விடுவாராம்.
இப்படி அவர் தொடர்ந்து உதவி செய்து வந்தபோதும், ஜன்னல்ஓரம் படத்திற்காக தனது சம்பளம் 85 லட்சத்தை அவர் விட்டுக்கொடுத்ததுதான் வெளியில் தெரிந்தது. ஆனால், அதைப்பற்றி இப்போது சிலர் மேடைகளில் சொல்லி விமலை பெருமையாக சொல்கிறார்கள். ஆனால், அதையும் அவர் பெரிதாக ரியாக்சன் பண்ணிக்கொள்வதில்லை. ரொம்ப கேசுவலாக அமர்ந்திருக்கிறார்.
ஆனால், இந்த 85 லட்சம் நிகழ்வுக்குப்பிறகுதான் விமலுக்கு எத்தனை படாதிபதிகள் சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள் என்கிற விவரமும் வெளியில் தெரியத்தொடங்கியிருக்கிறது. ஆனால், அப்படி தனக்கு தரவேண்டியவர்கள் யாரிடமும் மீண்டும் தொடர்பு கொண்டு பணம் குறித்து பேசுவதில்லையாம் விமல். பாவம் அவர்களுக்கு என்ன பிரச்னையோ என்று விட்டுவிடுகிறாராம்.
இப்படி விமல் செய்து வரும் உதவிகளை சில நடிகர்களே மேடையில் சொல்கிறார்கள். அப்படி சமீபத்தில் ஒரு மேடையில் நடிகர் பிரசன்னா தெரிவித்தபோது, எனக்கெல்லாம் விமல் மாதிரி விட்டுக்கொடுக்கிற பெரிய மனசெல்லாம் கிடையாது என்றும் கூறினார்.