டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல ஜோதிடர் நெல்லை வசந்தனின் மகன் மாருதி சினிமாவில் ஹீரோவாகி விட்டார். மறுமுனை அவர் நடிக்கும் முதல் படம். மிருதுளா ஹீரோயின். சின்னத்திரை நிகழ்ச்சிகளை தயாரித்த எம்பிஎல் நிறுவனம் தயாரிக்கும் முதல் படம். கே.பாக்யராஜ், பாண்டியராஜனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய மாரிஸ்குமார் டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தை சேலம் மாவட்டத்திற்குள்ளேயே எடுத்து முடித்துள்ளனர்.
இதுகுறித்து டைரக்டர் மாரிஸ் குமார் கூறியதாவது: காதலுக்கு பெற்றவர்கள் எப்போதுமே எதிரியில்லை. வெளியில்தான் இருக்கிறார்கள். அந்த எதிரிகளால் நம் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காத்தான் பெற்றோர்கள் காதலை எதிர்க்கிறார்கள். அந்த வெளி எதிரிகள் யார் என்பதை இந்தப் படத்தில் சொல்கிறேன். சேலம் மாவட்டத்தில் 60 லொக்கேஷன்களில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்காடு மலையின் அழகை இதுவரை யாரும் காட்டாத கோணங்களில் காட்டியிருக்கிறோம். எங்களுக்காக சிம்பு ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார். என்றார்.