12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' |
வளர்ந்து வரும் பாடலாசிரியர், பாடகர், நடிகர் கானா பாலா. அட்டக்கத்தி படத்தில் வரும் "ஆடி போனா ஆவணி இவ ஆளை மயக்கும் தாவணி..", "நடுக்கடலுல கப்பல இறங்கி தள்ள முடியுமா...", சூது கவ்வும் படத்தில் இடம்பெற்ற "காசு பணம் துட்டு மணி மணி..." பாடல்கள் மூலம் புகழ்பெற்ற கானா பாலாவின் கையில் இப்போது 20 படங்கள். "என்னால் எல்லாவிதமான பாடல்களையும் எழுத முடியும், பாட முடியும் ஆனால் காதல் தோல்வி பாடல்களையும், டாஸ்மாக் பாடல்களையும் எழுதச் சொல்லி டார்ச்சர் பண்றாங்க" என்கிறார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: "நிறைய பாட்டு வாய்ப்பு வருவது சந்தோஷமாகத்தான் இருக்கு. ஆனா எல்லாமே காதல் தோல்வி பாட்டும், பொண்ணுங்கள திட்டுற பாட்டுமாத்தான் இருக்கு. எவ்வுளவுதான் எழுதுறது ஒரே மாதிரி வார்த்தைகள்ல எழுதினா போரடிச்சுடும். இத்தனைக்கும் எனக்கு காதல் பிடிக்காது. பெற்றவர்கள் பார்த்து நடத்தி வைக்குற லைபுதான் நல்லா இருக்கும்ங்றது என்னோட கருத்து.
அதோட எனக்கு குடிக்கிற பழக்கம் பிறவியிலேருந்தே கிடையாது. ஆனா அதிகமான டாஸ்மாக் பாட்டு எழுதச் சொல்லி டார்ச்சர் கொடுக்குறாங்க. வேற வழியில்லாம நானும் எழுதிக்கிட்டிருக்கேன். சில படங்கள்ல ஆட வைக்கிறாங்க. பானை செய்றதுக்கு மண்ணு மிதிக்கிற மாதிரி நானும் ஆடிக்கிட்டிருக்கேன் என்றார்.