'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு ஒரு பக்கவான போலீஸ் ஸ்டோரி ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறார் மிஷ்கின். அதில் நடிக்க கமல் முதல் அஜீத் வரை கேட்டுப்பார்த்துவிட்டார், எல்லோருமே "அப்புறம் பார்க்கலாம்" என்ற பதிலையே சொல்லியிருக்கிறார்கள். இப்போது அதில் சரத்குமார் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ராதிகா சரத்குமாரின் ரேடான் நிறுவனமும், மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இதனை இணைந்து தயாரிப்பதாக கூறப்படுகிறது.
இதுபற்றி சரத்குமார் கூறியதாவது: மிஷ்கின் என்னிடம் கதை சொல்லியுள்ளார். அதில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். தயாரிப்பாளர் யார் என்பது விரைவில் தெரிந்து விடும். ஏ.வெங்கடேஷ் ஏய்-2 கதையை தயாராக வைத்துள்ளார், அதிலும் நடிக்கிறேன். இந்தி காஞ்சனாவில் நான் நடிப்பதாக வந்த செய்திகள் உண்மையில்லை. அதுபற்றி யாரும் என்னிடம் பேசவில்லை. இந்தியில் யாரும் நடிக்க முன்வராவிட்டால் நான் நடிக்க ரெடி. மலையாள திரிஷ்யம் ரீமேக்கில் நடிக்கும் ஆர்வமும் இருக்கிறது. என்றார்.