மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 |
தமிழ் சினிமாவின் அழகான ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர் அரவிந்த்சாமி. ரோஜா, தளபதி நேரத்தில் பெண்களின் கனவு நாயகன் அவர். திடீரென்று சினிமாவை விட்டு விலகியவர் பல ஆண்டுகளுக்கு பிறகு கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார்.
தற்போது மகேஷ் மஞ்ச்ரேக்கர் டைரக்ட் செய்யும் இந்திப் படம் ஒன்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்து தான் நடிக்கும் தமிழ் படம் ஒன்றிற்காக சிக்ஸ் பேக், பாடி பில்டிங் என்று ஜிம்மே கதியாக கிடக்கிறார். அவருக்கு திமோல்தி என்பவர் பயிற்சியாளராக இருந்து மாற்றி வருகிறார். அழகன் அரவிந்த்சாமி இப்போது கிட்டத்தட்ட ஆண்அழகன் போட்டிக்கு தயாராகிற அளவிற்கு தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
"ஒரு முக்கியமான தமிழ் படத்திற்காக ஒர்க்அவுட் பண்ணி வருகிறேன். அந்த படம் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது முறைப்படி சம்பந்தப்பட்டவர்கள் அறிவிப்பார்கள்" என்கிறார் அரவிந்த் சாமி.