அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
நயன்தாரா, முன்னணி ஹீரோக்களுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து, பல படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமல்லாமல், இளம் தலைமுறை நடிகர்களும், நயனுடன் ஜோடி சேரவே, போட்டி போடுகின்றனர். இதனால், விரைவிலேயே, தமிழில் மறுபடியும் நம்பர் - 1 நாற்காலியில் நயன்தாரா அமர்ந்து விடுவார் என்று கோடம்பாக்கத்தில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், தொடர்ந்து, ஹீரோக்களுடன், மரத்தை சுற்றி,டூயட் பாடும் கதைகளை தவிர்த்து, இடையிடையே, கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடிப்பதென முடிவெடுத்துள்ளார் நயன்தாரா.
இதனால், தனக்கு கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம், இரண்டு டூயட், இரண்டு அழுகை சீன், கிளைமாக்சில் ஹீரோவுடன் தோன்றுவது என, வழக்கமான ஹீரோயின் வேடமாக இருந்தால், தயவு செய்து, இடத்தை காலி செய்து விடுங்கள். ஹீரோவுக்கு இணையான கேரக்டராக இல்லாவிட்டாலும், ஹீரோயின் என்ற முறையில், என் நடிப்புத் திறமையை அழுத்தமாக பதிவு செய்யும் வகையில், சில காட்சிகளாவது இருந்தால், தொடர்ந்து கதை சொல்லுங்கள் என, கண்டிப்பாக கூறி விடுகிறாராம்.