சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி |
ஹன்சிகா, காஜல்அகர்வால் என பல நடிகைகள் மார்க்கெட்டில் இருந்தபோதும் நயன்தாரா என்ட்ரி ஆனதும் இரண்டு படங்களிலேயே மார்க்கெட்டை தன் பக்கம் இழுத்து விட்டார். அதோடு அனாமிகா மூலம் கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் இமேஜூம் அவரை ஒட்டிக்கொண்டதால் இப்போது குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்து விட்ட நயன், சிம்புவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்திருப்பதால், அவரது மார்க்கெட்டில் மீண்டும் பரபரப்பு அலை வீசத் தொடங்கியிருக்கிறது.
அவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் சேதியறிந்து, படப்பிடிப்பு நடைபெறும் இடங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தவண்ணம் உள்ளதாம். இதனால் ரசிகர்களின் தள்ளுமுள்ளுவில் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள செக்யூரிட்டியோடு களத்திற்கு சென்று வருகிறாராம் நயன்தாரா.
இந்த நிலையில், இன்னும் பெயரிடப்படாத அப்படத்தில் சிம்பு-நயன்தாரா சம்பந்தப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை வெளிநாடுகளில் நடத்த திட்டமிட்டுள்ளாராம் பாண்டிராஜ். அதனால் படத்திற்கு ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட இப்போதும் இன்னும் எகிறி நிற்கிறதாம். இதனால் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் அளவுக்கு இந்த படமும் பிரமாண்ட காதல் படமாகும் என்கிறார்கள்.