ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மறுமுகம் படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருப்பவர் பஞ்சாப் நடிகை ப்ரீத்திதாஸ். மாடலிங் துறையில் இருந்த இவரை இப்படத்திற்காக அழைத்து வந்தவர்கள், சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டபிறகு, ஒரு உதட்டு முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று காதோரம் கிசுகிசுத்தார்களாம். அதைக்கேட்டு அதிர்ந்து போனாராம் நடிகை. காரணம், முதல் படத்தில் அத்தனை பேர் முன்னிலையில் நடிப்பதே பெரிய விசயம. இந்த நிலையில், ஹீரோவை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கச்சொன்னால் எப்படி என்னால் முடியும் என்று அச்சம் ஒரு பக்கம், வெட்கம் மறுபக்கம் என தடுமாறிப்போய் நின்றாராம் ப்ரீத்திதாஸ்.
அதனால், அவரது நிலையை புரிந்து கொண்ட இயக்குனர், சில நாட்கள் ரொமான்ஸ் காட்சிகளை எடுத்தபிறகு அந்த காட்சியில் நாயகன் உடன் ப்ரீத்திதாஸை நடிக்க வைத்தாராம். முதலில் இருந்ததை விட அவரிடம் சகஜமாக பழகி விட்டதால், பின்னர் இயல்பாக உதட்டு முத்தக்காட்சியல் நடித்தாராம் ப்ரீத்திதாஸ்.
இருப்பினும், அந்த காட்சி சீக்கிரம் ஓ.கே ஆகிடனும் என்று கடவுளை வேண்டிக்கொண்டபடியே நடித்தாராம் ப்ரீத்தி. ஆனால், அவர் நேரம், பத்து டேக்குக்கு மேல் எடுத்தபிறகுதான் அந்த காட்சி ஓ.கே ஆனதாம். இருப்பினும் ப்ரீத்திக்கு அந்த ஒரு முத்தக்காட்சியே பல படங்கள கிடைக்க வழிவகை செய்யும் என்று பலரும் கருத்து கூறி வருகிறார்களாம். இதனால் மறுமுகம் படத்தின் ரிலீசுக்குப்பிறகு கோடம்பாக்கம் தன்னை தத்து எடுத்துக்கொள்ளும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன் காத்திருப்பதாக சொல்கிறார் ப்ரீத்திதாஸ்.