இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
தெலுங்கு சினிமாவின் இளம் நடிகர் உதய் கிரண் (வயது 33) தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 1980-ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி ஆந்திராவில் பிறந்தவர் உதய் கிரண். ஆரம்பகாலத்தின் மாடலின் துறையில் இருந்த வந்த உதய் கிரண், 2000ம் ஆண்டு சித்திரம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து நுவ்வு நெனு, மானாசாந்தா நுவி என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து ஹாட்ரிக் நாயகன் எனும் பட்டத்தை பெற்றார். தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தவர் தமிழில் கூட பாலசந்தரின் பொய் படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார். பிறகு கருணாநிதியின், பெண்சிங்கம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசனுக்கு பிறகு இளம் வயதில் பிலிம்பேர் விருது வாங்கிய பெருமை நடிகர் உதய் கிரணுக்கு உண்டு. கடந்தாண்டு ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி தான் தனது ஆரம்பகால தோழி விஷிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். விஷிதாவை திருமணம் செய்வதற்கு முன்பாக 2003ம் ஆண்டு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகள் சுஷ்மிதாவுடன் திருமணம் நிச்சயமாகி, சிலபல காரணங்களால் அந்த திருமணம் நின்று போனது.
இந்நிலையில் புஞ்சாகுட்டா பகுதியில் உள்ள ஸ்ரீநகரில் குடியிருப்பில் வசித்து வந்த உதய் கிரண், மனைவி விஷிதா வெளியே சென்ற நேரம் பார்த்து, திடீரனெ வீட்டிலேயே தற்கொலை செய்து கொண்டார். விஷிதா, உதய்க்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. உதய் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விஷிதா, அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து உதய்யை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் டாக்டர்கள், உதய் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.
உதய் கிரண் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உதய் கிரணின் தற்கொலை சம்பவம் ஆந்திர திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.