ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மங்காத்தா படத்தை இயக்கிய பிறகு விஜய், சூர்யா போன்ற நடிகர்களில் ஒருவரை வைத்து அதே வேகத்தில் அடுத்த படத்தை இயக்கி விட வேண்டும் என்பதுதான் வெங்கட்பிரபுவின் அப்போதைய ஆசையாக இருந்தது. அதனால், மங்காத்தா ஹிட் என்ற மகிழ்ச்சியான செய்தியோடு புதிய ஸ்கிரிப்டுடன் விஜய்யை சந்தித்தார் வெங்கட்பிரபு, ஆனால் அவர் ஏற்கனவே சில படங்களில் கமிட்டாகியிருந்ததால் கதையே கேட்கவிலலை,
அதற்கடுத்து சூர்யாவை அட்டாக் பண்ணினார் வெங்கட்பிரபு. கதையை கேட்ட அவரோ, இந்த கதை எனக்கு செட்டாகாது என்று சொல்லி தம்பி கார்த்தி பக்கம் திருப்பி விட்டார். அதன்பிறகுதான் பிரியாணி உருவானது. ஆக, மேல்தட்டு நடிகர்களில் ஒருவரை இயக்கி விட வேண்டும் என்று நினைத்த வெங்கட்பிரபு மறுபடியும் இரண்டாம்தட்டு ஹீரோவை இயக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்.
ஆக, இப்போது பிரியாணியும் வெளியாகி விட்டதால், அடுத்து எப்படியேனும், சூர்யாவை பிடித்து விட வேண்டும் என்று ஒரு டபுள் ஹீரோ கதையை அவரிடம் சொன்னார். கதையை கேட்ட சூர்யாவுக்கு ஆக்சன் இல்லாத காமெடி கதை என்றதும், அதன் மீது ஈடுபாடாகி விட்டதாம். அதனால், தற்போது நடித்து வரும் லிங்குசாமியின் படத்தை முடித்ததும் நாம் கூட்டணி சேருவோம் என்று நம்பிக்கை வாக்குறுதி வழங்கியிருக்கிறாராம்.
அதனால், ஏற்கனவே கமல் நடித்த கல்யாண ராமன் என்ற தலைப்பில் ஒரு காமெடி ஸ்கிரிப்ட்டை வேகவேகமாக தயார் செய்து கொண்டிருக்கிறார் வெங்கட்பிரபு. தொடர்ந்து ஆக்சன் கதைகளில் நடித்து வரும் சூர்யாவும், ஒரு ரிலாக்சுக்காக இந்த காமெடி கதையில் நடிப்பதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு, அடிக்கடி கதை விவாதத்திலும் கலந்து கொண்டு தன் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறாராம்.