வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
சமீபத்தில் ரிலீசான படம் ஆப்பிள் பெண்ணே. வட்சன், ஐஸ்வர்யாமேனன், ரோஜா, தம்பி ராமய்யா நடித்திருந்தனர். ஆர்.கே.கலைமணி டைரக்ட் செய்திருந்தார். இந்தப் படத்தை ரியல் எஸ்டேட் புரோக்கர் கே.ஜி.பாண்டியன் தயாரித்திருந்தார். அத்துடன் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்திருந்தார்.
இப்போது தயாரிப்பாளர் பாண்டியன் மீது அவரது மனைவி ஸ்ரீதேவி போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார். "1998ம் ஆண்டு பாண்டியனை திருமணம் செய்து கொண்டேன். கிளாசியா, பூஜா, சஞ்சித் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் நல்ல வருமானம் கிடைத்ததும், அதைக் கொண்டு ஆப்பிள் பெண்ணே என்ற படத்தை எடுத்தார். சினிமா தயாரிக்கும்போது அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. அது முதல் சரியாக வீட்டுக்கு வருவதில்லை. மது அருந்திவிட்டு வந்து என்னையும், குழந்தைகளையும் அடித்து துன்புறுத்துகிறார். ஆபாச சிடிக்களை பார்க்க சொல்லி வற்புறுத்துகிறார்" இப்படி அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார் ஸ்ரீதேவி.