ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ் சினிமாவில் கதை வறட்சி நிலவுகிறது என்பதை கோடம்பாக்கத்தின் பிரபலங்களே ஒத்துக்கொண்டு வருகின்றனர். அந்த அளவுக்கு கடும் கதை வறட்சிதான் சமீபகாலமாக தமிழ் சினிமாவை சூழ்ந்துள்ளது. இந்த நிலையிலும், விஜயசேதுபதி நடிப்பில் வெளியான சூதுகவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்கள் ஒரு ஆறுதலாக விளங்கின.
இந்த நிலையில், தற்போது மலையாள படங்களை தமிழில் ரீமேக் செய்கிற நிலை உருவாகியிருக்கிறது. பிரபல ஹீரோக்களும், அதை வரவேற்பதால், மோகன்லால் நடிப்பில் வெளியான த்ரிஷ்யம் அடுத்து தமிழில் ரீமேக் ஆகிறது. முன்னதாக, காக்டெயில் என்ற படமும் தற்போது தமிழில் அதிதி என்ற பெயரில் ரீமேக் ஆகிக்கொண்டிருக்கிறது.
நந்தா நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அனன்யா நாயகியாக நடிக்கிறார். இந்த கேரக்டர் தன்னை வெகுவாக பாதித்ததாக சொல்லும் அனன்யா, நாடோடிகள், எங்கேயும் எப்போதும், சீடன் படங்களுக்குப்பிறகு இந்த படம் தன்னை தமிழில் பேச வைக்கும் என்கிறார். அதோடு, காட்சிகளில் யதார்த்தம் மீறாமல் நடித்து வருவதாக சொல்பவர், இந்த படம் என்னை தமிழில் நிலையான நடிகையாக்கும் என்கிறார்.
அந்த அளவுக்கு கதாபாத்திரத்தோடும, காட்சிகளோடும் ஒன்றி நடித்து வருவதாக சொல்லும் அனன்யா, எதிர்காலத்தில் தமிழ்-மலையாளம் என இரு மொழி நடிகையாகி இரட்டை குதிரை சவாரி செய்யவும் தன்னை தயார்படுத்தி வருகிறாராம்.