தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இரண்டு மெகா நடிகர்களின் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வந்தாலே பிரச்னைதான். அந்த வகையில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யின் போக்கிரியும், அஜீத்தின் ஆழ்வார் படமும் திரைக்கு வந்தன. அதனால் அப்போது அவர்கள் இருவரது ரசிகர்களும் கட்அவுட், பேனர்கள் வைப்பது சம்பந்தமாக பல இடங்களில் மோதிக்கொண்டனர்.
அதையடுத்து, விஜய்-அஜீத் இருவரது படங்களுமே ஒரே நாளில் வெளியாகாததால் எந்தவித மோதலும் வெடிக்காமல இருந்தது. ஆனால், வருகிற 10-ந்தேதி ஜில்லா-வீரம் என இரண்டு படஙகளும் வெளியாக இருப்பதால் தமிழகத்திலுள்ள தியேட்டர்களில் தங்கள் அபிமான ஹீரோவின் கட்அவுட் வைப்பதில் விஜய்-அஜீத் ரசிகர்களுக்கிடையே மீண்டும் மோதல் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக, இவர்களது பிரச்னையால் தியேட்டர்காரர்கள் பெரும் அவதிக்கு ஆளாகிறார்களாம். எந்த நடிகருக்கும் சாதகமான செயல்பட முடியாத நிலையில் இருப்பதால், அவர்களது ரசிகர்கள் கட்அவுட் வைப்பதற்காக தியேட்டரில் இடம்பிடிக்கும்போது அவர்களை பகைத்துக்கொள்ளவும் முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறார்கள்.
சென்னை, மதுரை, சேலம் உள்ளிட்ட பல ஏரியாக்களில் பேனர் வைப்பதில் விஜய்-அஜீத் ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டுள்ளனர். சில ஏரியாக்களில் ஒரு நடிகரின் பேனர்களை இன்னொரு நடிகரின் ரசிகர்கள் கிழித்தும் அசம்பாவிதத்தில் ஈடுபட்டு வருகிறார்களாம். இதனால் பல பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.