ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அர்ஜுன் தற்போது தனது வெற்றிப் படமான ஜெய்ஹிந்தின் இரண்டாகம் பாகத்தை டைரக்ட் செய்து நடித்து வருகிறார். அவரே ஹீரோவாகவும் நடிக்கிறார். மூன்று பேர் மூன்று காதல் படத்தில் அறிமுகமான சுர்வீன் ஹீரோயின். இவர்கள் தவிர சிம்ரன் கபூர் என்ற நியூபேசும் அறிமுகமாகிறார். தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் தயாராவதால் மற்ற கேரக்டர்களில் அந்தந்த மாநில மொழி நடிகர்கள் நடிக்கிறார்கள்.
பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்து விட்டது. இதுகுறித்து அர்ஜுன் கூறியதாவது: என்னோட சினிமா கேரியரின் முக்கியமான கால கட்டத்தில் இருக்கிறேன். ஜெய்ஹிந்த்-2 எனது லட்சியப் படம், முதல் பாகத்தில் தேசப்பற்றை வலியுறுத்தினேன். இந்தப் படத்தில் தேச வளர்ச்சிக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறேன்.
பாங்காக்கில் இதுவரை யாரும் படம் எடுத்திராத ராணுவ பகுதியில் முதன் முறையாக நான் எடுத்திருக்கிறேன். பழைய ராணுவ தளவாடங்கள் குவிக்கப்பட்டு இருக்கும் அந்த இடத்தில் அமெரிக்க சண்டை கலைஞர்களுடன் சண்டையிடும் காட்சி படமாக்கப்பட்டது.
அடுத்து மும்பை, லண்டன், சென்னையில் தலா 20 நாட்கள் படப்பிடிப்பு நடத்த ஏற்பாடு செய்து வருகிறேன். பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படம் என்றார்.