டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பொதிகை டிவியில், தினமலர் வழங்கும், "எப்படிப் பாடினரோ' ஆன்மிக இசை நிகழ்ச்சி வாரம்தோறும், திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் காலை 11.30 முதல் 11.55 மணி வரை ஒளிபரப்பாகி வருகிறது. , இன்று (25ம்தேதி), திருத்தணி முருகன் பற்றிய ஐந்தாவது நிறைவுப்பகுதி ஒளிபரப்பாக உள்ளது. இதில், மலைக்கோவிலில் உள்ள நான்கு பிரகாரங்கள், ஏனைய சன்னிதிகள், பஞ்சாட்சரப் படிகள், ருத்ராட்சமண் டபம், மூலவர் பற்றிய குறிப்புகள், கோவிலின் அமைப்பு, இங்கு ஆண்டு முழுவதும் நடக்கும் விழாக்கள், எடுக்கப்படும் காவடிகளின் சிறப்பு அமைப்பு, இங்கு நடக்கும் குஹானந்தநாதர் குருபூஜை பற்றிய செய்திகள், இத்தலத்திற்கு பாடல்கள் பாடியுள்ளவர்கள் யார் யார்? கச்சியப்ப முனிவர், கந்தப்ப தேவர் ஆகியோர் பற்றிய குறிப்புகள், கற்பூரக் கொப்பரை ஆகியவை பற்றியும் இடம்பெறுகின்றன. இந்நிகழ்ச்சிக்கு ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் விளக்க உரை அளிக்க, டி.வி.சுந்தரவல்லி பாடுகிறார். எஸ்.நீலகண்டன் ஒருங்கிணைப்பில், ஆடியோ வேர்ல்டு சுக்ராவிஷனின் தயாரிப்பான இந்நிகழ்ச்சியை ஜெயம்கொண்டான் இயக்கி உள்ளார்.