மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் | 'மஞ்சும்மேல் பாய்ஸ்' ஓடிடி உரிமை எவ்வளவு தெரியுமா? | நடிகை தமன்னாவுக்கு மும்பை சைபர் கிரைம் சம்மன் | ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? |
அனுஷ்காவுக்கு, 30 வயதாகி விட்டது. அவர், விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று தான் கூறப்பட்டது. ஆனால், தமிழில், 'இரண்டாம் உலகம்' படத்தை முடித்துவிட்டு, தெலுங்குக்கு சென்ற, அவர், 'ராணி ருத்ரம்மா தேவி, பாகுபாலி, பானுமதி என்று பல சரித்திர படங்களில் ஒப்பந்தமாகி, மீண்டும் படு பிசியான நடிகையாகி விட்டார். இந்த படங்களில், அதிரடியான வேடங்கள் என்பதால், கிட்டத்தட்ட கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையே, மறந்து விட்டாராம், அனுஷ்கா.'சினிமாவில் என் திறமைக்கு, தீனி போட்ட முதல் படம், 'அருந்ததி' மட்டுமே. அதன்பின், என் திறமைக்கேற்ற வேடங்கள், இப்போது தான் கிடைத்துள்ளன. திருமணம் எப்போது வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். ஆனால், இந்த மாதிரி படங்கள் இன்னொரு முறை கிடைப்பது அரிதாயிற்றே' என்கிறார் அனுஷ்கா.