தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
180, வெப்பம், உருமி படங்களில் நடித்த நித்யாமேனன், இப்போது ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை, மாலினி 22 பாளையங்கோட்டை ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இதில் மாலினி 22 பாளையங்கோட்டையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விடுபவர்களை அவர் பழிவாங்குவது போன்ற கதையாம்.
இந்த அனுபவம் பற்றி நித்யாவைக்கேட்டபோது, இன்றைக்கு நாட்டில் பல இடங்களிலும் நடைபெற்று வரும் பாலியல் பலாத்காரம் சம்பவத்தை மையப்படுத்திய கதை என்பதினால் இப்படத்தில் ஒரு சமூக நோக்கத்துடன் நடித்திருக்கிறேன். பெரிய சம்பளம் இல்லை என்றாலும், மனசுக்கு பெரிய திருப்தி அளிக்கக்கூடிய படமாகும்.
மேலும், இப்படத்தில் பாலியல் பலாத்கார காட்சியில் கவர்ச்சியாக நடித்தீர்களா? என்று பலரும் கேட்கிறார்கள். பாலியல் பலாத்கார சம்பவத்தை ஆபாசமாகத்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. துளியும் ஆபாசம் இல்லாமலும் எடுக்கலாம்,. அப்படித்தான் ஸ்ரீப்ரியா மேடம் இந்த படத்தை எடுத்திருக்கிறார். அதனால், கிளாமராகவே நடிப்பதில்லை என்ற கொள்கையுடன் நடித்து வரும் எனக்கு எந்த சங்கடத்தையும் அவர் தரவில்லை என்கிறார் நித்யாமேனன்.