ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
2013ம் ஆண்டில் அறிமுகமான ஹீரோ, ஹீரோயின்களை கணக்கெடுத்தால் எண்ணிக்கை செஞ்சுரியை தாண்டும். ஒரே படத்தோடு மூட்டை கட்டியவர்களே அதிகம். ஒரு சிலர் மட்டுமே தங்கள் திறமையாலும், அழகாலும் சினிமாவை தக்க வைத்துக் கொண்டார்கள். அவர்களில் முக்கியமானவர்களை பற்றி பார்க்கலாம்.
நஸ்ரியா நசிம்
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்த அழகு தேவதை. நேரம் இவருக்கு முதல் படம். நேரமும் நன்றாக அமைந்து விட்டதால் அடுத்து ராஜாராணியில் ஆர்யாவுடன் நடித்தார். கேரியர் டாப் கீயர் போட்டு கிளம்புற நேரத்தில் வந்தது தொப்புள் பிரச்னை. சும்மாங்காட்டியும் ஒரு பரபரப்புக்காக நய்யாண்டி பட இயக்குனர் டிரைய்லரில் ஒரு டூப்ளிக்கேட் தொப்புளை சேர்க்க நஸ்ரியா பொங்கி எழுந்து போலீஸ் வரைக்கும் போனார். "அடடா இந்து பொண்ணு நமக்கு சரிப்பட்டு வராது" என்று ஹீரோக்கள் ஒதுங்கி ஓட "சாரே எண்ட மோள் அங்கன அல்ல சாரே..." என்று அச்சன் விளக்கம் கொடுக்க இப்போ நிலைமை சரியாகி விட்டது.
துளசி
அலைகள் ஓய்வதில்லை ராதாவின் மகள் துளசி மணிரத்தினத்தின் கடல் படத்தில் அறிமுகமானார். முதல் மகள் கார்த்திகா எதிர்பார்த்த இடத்தை பிடிக்கவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த ராதா குருவாயூரப்பனை வேண்டி கடலில் தள்ளினார். தன் முதல் ஹீரோ கார்த்திக்கின் மகன்தான் ஹீரோ என்பதில் அவருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருந்தது. கார்த்திகாவை ஒப்பிடும்போது துளசியிடம் நடிப்பும், அழகும் தூக்கலாகவே இருக்கிறது. ஆனால் அம்மா ராதா மாதிரி பிள்ளைகள் இல்லையே என்பது 80களில் இளைஞர்களாக இருந்தவர்களின் கவலை. கடல் காலைவாரினாலும் யான் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் அம்மையும் மோளும்.
மிருத்திகா
கொஞ்சம் நிறம் குறைவுதான். ஆனாலும் அழகாலும், நடிப்பாலும் மிரட்டினார் 555 மிருத்திகா. படம் முடிவதற்கு முன்பே அமீருக்கு ஜோடியாக இதனால் சகலமானவர்களுக்கும் படத்தில் ஒப்பந்தமாகி விட்டார். அமீர் படம் முடிக்கும் வரை வேறு படம் நடிக்க கூடாது என்ற கண்டிஷனால் பிரபு சாலமனின் கயல் படத்தை மிஸ் பண்ணினார்.
இஷா தல்வார்
தட்டையன் மறத்து மலையாளப் படத்தின் மூலம் சேட்டன்களை கட்டிப்போட்டவர் தில்லுமுல்லுவில் அறிமுகமானார். துறுதுறு நடிப்பு, பளபள அழகு இரண்டும் இருந்தும் அடுத்த வாய்ப்பு இல்லாமல் மீண்டும் கேரளாபக்கமே கரை ஒதுங்கி விட்டார். சீக்கிரமே யாராச்சும் அழைச்சிட்டு வருவாங்கன்னு நம்புவோம்.
விபா
நம்ம அரவிந்த்சாமியியோட உறவுக்கார பொண்ணு. மதில்மேல் பூனை படத்துல பயங்கரமா சண்டையெல்லாம் போட்டு நடிச்சார். ஆளும் அழகா இருக்கார். அடுத்து சும்மா நச்சுன்னு இருக்குங்ற படத்துல நடிச்சு கொஞ்சம் டவுனாயிட்டார். ஆனாலும் நம்பிக்கையான வரவுதான் விபா.
அஷ்ரிதா ஷெட்டி
இவரும் இஷா தல்வார் மாதிரிதான் உதயம் என்.எச் 4ல நடிச்சிட்டு அந்த ஒரு படத்தோட இடத்தை காலி பண்ணிட்டு போயிட்டார். நல்லா வருவார்னு நம்பிக்கை தந்தவர். இவரையும் யாராவது திரும்ப அழைச்சிட்டு வருவாங்க.
கவுதம்
நடிகைகளிலாவது அஞ்சாரு பேரு தேறினாங்க. நடிகர்களில் அந்த ஏரியா ரொம்ப வீக்கு. 2013ல அறிமுகமான ஹீரோக்களில் கார்திக் மகன் கவுதம் (கடல்) தவிர வேறு யாருமே தேறவில்லை.