'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழில் இன்னமும் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் ஆடிக்கொண்டிருக்கும் காஜல்அகர்வாலுக்கு, மகதீரா படத்திற்கு பிறகு தெலுங்கு மார்க்கெட் ஸ்டெடியாகி விட்டது. நான்ஈ படத்தை இயக்கிய ராஜமவுலி இயக்கிய அப்படம் பிரமாண்ட பட்ஜெட் என்பதோடு, சூப்பர் ஹிட்டாகவும் ஓடி வசூல் சாதனை புரிந்தது. அதனால், அந்த படத்திலிருந்து ராம்சரண்தேஜா-காஜல்அகர்வால் இருவரும் ராசியான ஜோடியாகி விட்டனர்.
அதோடு, இருவரது படக்கூலியும் கிடுகிடுவென உயர்ந்தது. அதனால் அதையடுத்து, நாயக் என்ற படத்திலும் அவர்கள் ஜோடி சேர்ந்து நடித்தனர். அந்த படமும் ஹிட்டானது. ஆனால், தொடர்ந்து அவர்கள் இணைந்து நடித்ததால் அவர்களை இணைத்து ஆந்திராவில் காதல் செய்திகள் வேகமாக உலவத் தொடங்கின. அதனால், அதன்பிறகு அவர்களை இணைத்து படம் தயாரிக்க பல மெகா நிறுவனங்கள் முன்வந்தும் தொடர்ந்து இணைந்து நடிப்பதை தவிர்த்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது கிருஷ்ணவம்சி இயக்கும் புதிய படத்தில் காஜல்அகர்வாலுக்கு சிபாரிசு செய்து மீண்டும் தன்னுடன் ஜோடி சேர்த்துள்ளாராம் ராம்சரண். இந்த படத்திற்கு அங்குள்ள வேறு பிரபல நடிகைகளிடம் அவர் கால்சீட் கேட்டுக்கொண்டிருந்த நிலையில்தான், காஜல் அழைத்து ராம்சரண் பேசியபோது, உடனே கால்சீட்டை வாரி வழங்கினாராம். அதனால்தான், மறுபடியும் ஆந்திராவில் ராம்சரண்-காஜல்அகர்வால் இருவரும் அதிரடி ஆட்டம் பாட்டம் போடத் தொடங்கியிருக்கிறார்களாம்.