ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழில் மார்க்கெட் வேகமாக உயர்ந்து கொண்டிருந்த நேரம்பார்த்து, சித்தியுடன் சண்டை போட்டுக்கொண்டு ஆந்திராவுக்கு பறந்தார் அஞ்சலி. அந்த சமயம் கைவசம் இரண்டொரு படங்கள் இருந்ததால், அதை வைத்து புதிய படங்களை அதிரடியாக கைப்பற்றி ஆந்திராவில் கொடி நாட்டி விடலாம் என்பதும் அப்போதைக்கு அஞ்சலியின் கணக்காக இருந்தது.
ஆனால், அவர் போட்ட கணக்கு எல்லாமே தப்பாகி விட்டது. காரணம், நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் அஞ்சலிக்கு பெரிய அளவில் படங்கள் இல்லை. அதனால் தற்போது வெங்கடேசுடன் மட்டும் ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையில் போதுமான வேலை வெட்டி இல்லாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்ததால் அஞ்சலியின் உடல்கட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பெருத்து விட்டதாம்.
அதனால், புதிய படவாய்ப்புகளுக்கு அவர் தேடிச்செல்லும் இயக்குனர்கள், அஞ்சலியை சுத்த விட்டு பார்த்து, இப்படி பெருத்துப்போய் இருந்தால் எப்படி ஹீரோயினி வேடம் தருவது என்று பேக் அடிக்கிறார்களாம். அதனால், வாயைககட்டி வயித்தக்கட்டி உடம்பை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறாராம் அஞ்சலி.
இதன்காரணமாக, இதுவரை ஹீரோக்களுடன் நட்பு வளர்க்கப்போகிறேன் என்று சொல்லி, மிட்நைட் பார்ட்டிகளுக்கு சலிக்காமல் விசிட் அடித்துக்கொண்டிருந்த அஞ்சலி, தனது உடம்பு பெருத்துப்போனதற்கு காரணத்தை புரிந்து கொண்டு, இப்போது இரவு 10 மணிக்கு மேல் தனது செல்போனை சுவிட் ஆப் செய்து வைத்து விடுகிறாராம்.