'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒவ்வொரு படத்தையும் முடித்ததும் எப்படி திருப்பதிக்குசென்று சாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக்கொண்டிருக்கிறாரோ அதேபோல் தனது மனைவி , மகளுடன் வெளிநாடுகளுக்கு ஜாலி டூர் சென்று வருவதையும் கடைபிடித்து வருகிறார் அஜீத். அந்த வகையில், தற்போது வீரம் படத்தை முடித்து விட்ட அவர், திருப்பதிக்கு சென்று முடி காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து விட்டு வந்தார்.
அதையடுத்து இப்போது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவுக்கு டூர் சென்றிருக்கிறார். அங்குதான் புதுவருடம் மற்றும், தனது மகள் அனோஷ்காவின் பிறந்த நாளை கொண்டாடுகிறாராம் அஜீத். அங்குள்ள சிட்னி-வெலிங்டன் கடல் மார்க்கத்தில் கப்பலில் பயணம் செய்தபடி மகளின் பிறந்த நாளை கொண்டாட்டத்தில் ஈடுபடப்போகிறார்களாம் அஜீத்-ஷாலினி தம்பதியர்.
ஆக, வருகிற 9-ந்தேதி வரை நாட்களை ஆஸ்திரேலியாவில் ஜாலியாக கழித்து விட்டு 10-ந்தேதி வீரம் படம் திரைக்கு வருவதால் அதற்குள்ளாக சென்னை திரும்புகிறாராம் அஜீத். அதனால், வீரம் படம் வெளியீட்டு விழாவை தமிழகமெங்கும் மிகுந்த பரபரப்பாக கொண்டாடப்போகிறார்களாம் அவரது ரசிக கோடிகள்.