இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
பாரதிராஜாவின் கண்களால் கைது செய் படத்தில் அறிமுகமான ப்ரியாமணிக்கு அதற்கு பிறகு பெருசா வாய்ப்பு எதுவும் இல்லை. திடீரென்று பருத்தி வீரனில் தேசிய விருது பெற்றதும் பரபரப்பு நடிகையானர். "அய்யயோ நான் அவார்ட் நடிகை இல்லீங்க எனக்கு கவர்ச்சிதான் பிடிக்கும்" என்று உரிச்ச கோழியாய் கவர்ச்சி காட்ட ஆரம்பித்தார். இந்த கவர்ச்சி ஆட்டம் தமிழ், தெலுங்கில் கொஞ்ச நாள் ஓடுச்சு. அப்புறம் தமன்னா, இலியானா, அனுஷ்கான்னு அழகிகள் படையெடுத்த பிறகு பிரியாமணி கப்சிப்.
இந்த வருடம் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடினார். இதுதான் அவருக்கு இந்த வருட சினிமாவே. அதுவும் நயன்தாரா ஆட மறுத்ததால் வந்த வாய்ப்பு. கையில் படமே இல்லாத ப்ரியாமணி குடும்பத்துடன் டூர் அடிக்க ஆரம்பித்து விட்டார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக குடும்பத்துடன் பேங்காக் போயிருக்கிறவர் 3ந் தேதிதான் திரும்புகிறார்.
இதற்கிடையில் புலியை தன் மடியில் படுக்க வைத்திருக்கும் போட்டோவை தனது பேஸ்புக்கில் வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். தாய்லாந்திற்கு போனவர் புலியை மடியில் தூக்கி வைத்து போஸ் கொடுத்திருக்கிறார். "விலங்குகள் மேல பாசம் வையுங்கப்பா" என்று ஸ்டேட்டசும் போட்டிருக்கிறார்.