‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
தமிழ் சினிமாவில் குடிசை ஜெயபாரதி மறக்க முடியாத இயக்குனர். எளிய முயற்சிகள் மூலம் தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்தவர். 1979ம் ஆண்டு இவர் இயக்கிய குடிசை படம் சென்னை குப்பத்தில் வாழும் மக்களின் சோகத்தை முதன் முதலாக பதிவு செய்த படம். பல விருதுகளையும் பெற்றது. பொதுமக்களிடம், மாணவர்களிடம் பணம் வசூலித்து படம் எடுப்பது இவரது வழக்கம். ஊமை ஜனங்கள், கனவுகள் கற்பனைகள், உச்சி வெயில் உள்பட 7 படங்களை இயக்கினார்.
தற்போது ஜெயபாரதி, புத்திரன் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். வறுமை காரணமாக கிராமத்திலிருந்து நகரத்திற்கு வரும் பெற்றோர். ஜனநெருக்கடியும், சத்தமும் நிறைந்த இந்த நகரத்தில் தன் குழந்தையை தொலைத்து விட்டு தேடுகிற வலியை சொல்லும் படமாக உருவாக்கி உள்ளார். அந்த பெற்றோராக ஒய்.ஜி.மகேந்திரனும், சங்கீதாவும் சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்துள்ளனர்.
படம் ரெடியாகி இரண்டு வருடங்கள் ஆகியும் யாரும் வாங்க முன் வரவில்லை. டிஸ்ட்ரிபியூட்டர்களும், மீடியேட்டர்களும்பார்க்ககூட முன்வரவில்லை. பரபரப்பு நிறைந்த இந்த விளம்பர உலகத்தில் தன் படத்தை வெளியிட முடியாமல் தவித்து வருகிறார் ஜெயபாரதி. இதனால் இப்போ மாணவர்களிடம் நிதி வசூல் செய்து அதைக் கொண்டு படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூயிருப்பதாவது: "புத்திரன் படத்தை விநியோகஸ்தர்கள் வாங்க மறுப்பதால் இரண்ட வருடங்களாக தவிக்கிறேன். பார்க்கூட யாரும் தயாராக இல்லை. ஆபீஸ ஆபீஸாக ஏறி இறங்கி என் கால்களும் தேய்ந்து விட்டது. சமுதாயத்துக்கு தேவையான ஒரு கருத்தை வலியுறுத்தித்தான் படம் எடுத்திருக்கிறேன். மறுபடியும் இப்போது மாணவர்களிடம்தான் மடிப்பிச்சை கேட்க இருக்கிறேன். சென்னையில் உள்ள 20 கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து நிதி திரட்ட முடிவு செய்திருக்கிறேன். ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி தரும் மாணவர்களின் பெயரை டைட்டிலில் போடுவேன்" என்கிறார் ஜெயபாரதி.