இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிருங்காரம் படத்தை டைரக்ட் செய்தவர் சாரதா ராமநாதன். சிருங்காரம் 3 தேசிய விருதுகளை பெற்றது. தற்போது சாரதா புதிய திருப்பங்கள் என்ற படத்தை டைரக்ட் செய்துள்ளார். நந்தா, ஆண்ட்ரியா நடித்துள்ள இந்தப் படம் குழந்தைகளை கடத்தும் அண்டர்வேர்ல்டு தாதாக்கள் பற்றியது.
இதற்கிடையில் சாரதா ராமநாதன் நாட்டியானுபவா என்ற பெயரில் இந்திய பரதநாட்டியத்தின் வகைகளையும், பெருமையையும் கூறும் டாக்குமெண்டரி படம் ஒன்றை இயக்கி இருக்கிறார். இதில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம், கதகளி, மணிப்புரி நடனம் போன்றவை இடம் பெற்றுள்ளது. நடனத்திற்கு பரதநாட்டிய கலைஞர் சித்ரா விஸ்வேஸ்வரன், பிஜு மகராஜ், ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட் ஒளிப்பதிவு செய்துள்ளார். லால்குடி ஜிஜேஆர்.கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். (அருகில் உள்ள படத்தில் இருப்பது டைரக்டர் சாரதா ராமநாதன், மோகினி ஆட்ட கலைஞர் சந்தியா, ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட்).