ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தெலுங்கில் மகேஷ்பாபு-கிரித்தி சனான் நடித்துள்ள படம் நேனொகடயனே என்ற படத்தின் போஸ்டரில், மகேஷ்பாபுவின் பின்னாடி முட்டி போட்டு கிரித்தி சனான் செல்வது போன்ற போஸ்டர்கள் ஆந்திரா முழுக்க ஒட்டப்பட்டிருந்தது. இதற்கு நடிகை சமந்தா, மகேஷ்பாபு பின்னாடி நாய் போன்று மண்டியிட்டு ஹீரோயினி செல்வது போல் அந்த போஸ்டர் உள்ளது என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதையடுத்து மகேஷ்பாபுவின் ரசிகர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். சமந்தாவுக்கு எதிரான கருத்துக்களையும் வெளியிட்டனர். இதையடுத்து, சித்தார்த்தும் சமந்தாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டார். இதனால், அவர்கள் இரண்டு பேருமே ஆந்திராவை விட்டே வெளியேற வேண்டும் என்று கொடி பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சேகர் கம்முலா என்ற ஆந்திர இயக்குனரும் இப்போது சமந்தா சொன்ன கருத்தை ஆதரித்து செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், கருத்து சொல்ல அனைவருக்குமே உரிமை உண்டு. ஒரு பெண்ணை கேவலமாக சித்தரித்திருப்பதைத்தான் சமந்தா சுட்டிக்காட்டியுள்ளார் என்றும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ஆந்திராவிலுள்ள மகேஷ்பாபுவின் ரசிகர்கள் மேலும் கொதிப்படைந்துள்ளார்களாம்.