டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பாவனா. மலையாளத்து வரவான இவர் தமிழில் தொடர்ந்து வெயில், தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று தென்னிந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வந்துவிட்டார். அவர் அளித்த சிறப்பு பேட்டி இதோ...
* ஆளையே பார்க்க முடியவில்லையே?
தமிழில் படங்கள் இல்லை என்பது உண்மை தான். ஆனால், மலையாளம், கன்னட படங்களில் பிசியாக இருக்கிறேன். தமிழில், நல்ல கதை கிடைக்கவில்லை. சரியான மேனேஜரும் அமையவில்லை. இந்த, மூன்று ஆண்டுகளில், தமிழ் சினிமாவை, ரொம்பவே மிஸ் பண்ணி விட்டேன். இந்த பிரச்னைகளிலிருந்து, இப்போது மீண்டு விட்டேன். இனிமேல், பழைய பாவனாவை, தமிழ் ரசிகர்கள் பார்க்கலாம்.
* தமிழில், பெரிய பிரேக் எதுவும் கிடைக்காதது, வருத்தமாக இருக்கிறதா?
சித்திரம் பேசுதடி படத்தில் நடிக்கும்போது, நான் ரொம்ப சின்ன பொண்ணு. அந்த படம், எனக்கு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. இந்த வாய்பை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றால், அதிகமாக பார்ட்டிக்கு போங்க... எல்லாரையும் சந்தியுங்க... நிறைய அறிமுகம் கிடைத்து, அதிக படங்கள் கிடைக்கும் என சிலர் கூறினர். ஆனால், வாய்ப்புக்காக, யாரையும் தேடிப் போக, எனக்கு விருப்பமில்லை. என்னை தேடி வரும் வாய்ப்புகளை, தேர்வு செய்து நடிப்பது என்பதில், உறுதியாக இருக்கிறேன்.
* இந்த, 15 ஆண்டு சினிமா அனுபவம், உங்களுக்கு கற்றுக் கொடுத்தது?
இதுவரை, மற்றவர்கள் கூறியதை கேட்டு, அதிகமான இழப்புகளை சம்பாதித்திருக்கிறேன். முடிவெடுப்பதிலும், குழம்புவேன். இப்போது, இந்த விஷயங்களில் தெளிவு ஏற்பட்டு விட்டது. கடந்த காலத்தை பற்றி நினைத்து, வருந்துவதை விட, எதிர்காலத்தில் நடக்கும் நல்ல விஷயங்களை பற்றி, சிந்திக்க விரும்புகிறேன்.
* உங்களின் தொடர்பில் உள்ள நட்சத்திரங்கள்?
ஜெயம் ரவியுடன், அப்பப்போ பேசுவேன். பரத்துடன், இப்போது மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறேன். மும்பையில், சூட்டிங் இருந்தால், மாதவனுடன் பேசுவேன். நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதில், அதிக ஆர்வம் உண்டு.
* எப்போது தான், கல்யாணம் பண்ணப் போறீங்க?
சமீபகாலமாக, வீட்டிலும் இந்த பிரச்னை துவங்கிடுச்சு. திருமணம் செய்யச் சொல்லி, வீட்டில் நச்சரிக்கின்றனர். இன்னும், ஓர் ஆண்டு டைம் கேட்டிருக்கேன். அதற்குள், தமிழில், முக்கியமான படங்களில் நடித்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.