இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
தமிழ் சினிமா ரசிகர்களால், நதியாவை, அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது. 'பூவே பூச்சூடவா' படத்துக்கு பின், 'நதியா தோடு, நதியா வளையல், நதியா புடவை' என, அப்போதைய இளம் பெண்களிடையே, பெரிய பேஷன் புரட்சியை ஏற்படுத்தினார். திருமணத்துக்கு பின், வெளிநாட்டில் குடியேறினார். சமீபத்தில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வந்த அவர், ஹீரோயின்களுக்கு இணையான சம்பளம் கேட்டதால், தயாரிப்பாளர்கள் தலைதெறிக்க ஓடினர். இதனால், மலையாள படங்களில் மட்டும் நடித்து வந்தார். திடீரென, தெலுங்கு திரையுலகிற்கு படையெடுத்து, மகேஷ் பாபுவின் அக்காவாக, ஒரு படத்தில் நடிக்க, வாய்ப்பு பெற்றார். இதில், ஹீரோவுக்கு இணையான வேடமாம், அவருக்கு. இதையடுத்து, அதே போன்ற அக்கா வேடங்கள், தமிழிலும் கிடைக்குமா என, தீவிரமாக வலை வீசி வருகிறாராம்.